Quantcast
Channel: கண்ணம்மா
Viewing all 52 articles
Browse latest View live

எனக்கு இன்று தான் தலைப்பிரசவம்---வைரமுத்து

$
0
0
ஒரு நாள் தனது மனைவியை மருத்துவமனையில் சேர்த்து விட்டு விடுமுறை போடுவதற்காக அலுவலகம் போனார் வைரமுத்து. அங்கு "மனோஜ் கிரியேஷன்ஸ் - பாரதிராஜா படத்திற்கு பாட்டெழுத அட்லாண்டிக் ஓட்டல் , அறை எண் 410க்கு வரவும் "என்ற குறிப்புச் சீட்டு , இவர் மேஜை மீது இவரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது.

மருத்துவமனையின் நிலைமையைத் தொலைபேசி மூலம் தெரிந்து கொண்டு 'அட்லாண்டிக்கில்'கலக்க இந்த ஓடை , கங்கையின் வேகத்தில் பிரவகித்தது.

அறையில் , இளையராஜா இருந்தார். கங்கை அமரன் இவரை அறிமுகம் செய்து வைத்தார். இருவரும் புன்னகை விளக்கம் செய்து கொள்கின்றனர்.

பாரதிராஜா வந்தார் ."ஓர் இளைஞன் ; இயற்கையின் நேசன்; கலைகளின் காதலன்; கனாக்களில் வாழ்பவன்; சமூகப் பிரக்ஞையும் உடையவன். ஓர் அந்திப் பொழுதில் இயற்கையை நேசித்தும் தன் சுய விலாசம் சொல்லியும், பாட்டொன்று பாடுகிறான் . இது தான் படத்தில் பாட்டு வருகிற சுழல்,"என்றார்.

இளையராஜாவின் ஆர்மோனியம் ஒரு ராஜராகம் பாட ஆயத்தமானது. "தானானே தன்னா தனனன தானானே தனனா". முதல்முறை அவர் வாசித்துக் காட்டிய போதே அந்த மெட்டுக்குள்ளிருக்கும் சுகலயத்தில் இவர் சொக்கிப் போனார். இரண்டாம் முறையும் மூன்றாம் முறையும் பாடிக்காட்டச் சொன்னார். இவரே , பின் பாடிக்கொண்டே எழுத ஆரம்பித்தார்.

"பொன் மாலைப் பொழுது இது ஒரு
பொன் மாலைப்பொழுது
வான்மகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்"

என்று எழுதி விட்டு சரிபார்க்குமாறு கொடுத்தார். இளையராஜா மனதுக்குள்ளேயே பாடிப்பார்த்து புருவங்களை உயர்த்தி, தலையாட்டி , தன் இசைக் குழுவினரைப் பாற்த்து சமிக்ஞை செய்த போது இவரது ஆனந்த வெள்ளம் கரைகடந்தது. பாரதிராஜா கீழே சென்று மேலே வருவதற்குள் சரணங்களை எழுதி முடித்து விட்டார்.

"பூ மரங்கள் சாமரங்கள் வீசாதோ"
"வானம் எனக்கொரு போதி மரம்"

என்ற இடங்களில் மனந்திறந்துபாராட்டினார் பாரதிராஜா. இளையராஜா தனது உதவியாளாரிடம் "வைரமுத்துவின் முகவரியை வாங்கி வைத்துக் கொள்ளப்பா"என்றார். அவர் போனபின் பாரதிராஜா,"இவன் இதுவரைக்கும் எந்த முகவரியையும் வாங்கிவைத்துக்கொள்ளச் சொல்லவில்லை. இன்று முதல் உங்களுக்கு ஒரு புதிய எதிர்காலம் "என்று அன்போடு அணைத்துக் கொண்டார்.

மருத்துவமனைக்கு வந்த போது இவருக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிறது . மனைவியார் தாமதம் பற்றி விசாரிக்கிறார். இவரோ , எனக்கு இன்று தான் தலைப்பிரசவம் "என்கிறார். அவர் மனைவிக்கு புரியவில்லை."பாரதிராஜா படத்துக்குப் பாட்டெழுதிவிட்டு வருகிறேன்! பல்லவி உன் பெயரோடு ஆரம்பிக்கிறது "எனக்கூறி சிரித்தார்.

வைரமுத்து ஒரு சினிமாக்கவிஞராக , அவர் மகன் கார்க்கியைப் போலவே அன்றுதான் பிறந்தார்.

வைரமுத்து முதல் பாடல் எழுதிய ஆண்டு 1980 . படம் 'நிழல்கள் '. இவரது பாடல் பதிவான முதல் பாடல் 'சூலம்'. இவர் எழுதி வெளிவந்த முதல் பாடல் இடம்பெற்ற படம் 'காளி'

மின்சார ரயில் அனுபவங்கள்...

$
0
0
--------------------------------------------------------------------------------

மாதம் ஒரு முறையாவது ரயிலில் பயணிக்க வேண்டும் என்பது என் New Month resolution..(நமக்கு ஒவ்வொரு நாளும் புது நாள் தான்..)..எனக்கு கிடைக்கும் அனுபவங்களுக்காகவே பயணிப்பவன் நான்..இதில் சுயநலம் கலந்திருக்கிறது என்று சொன்னால் 'இல்லை'என்று சொல்ல முடியாது என்னால்!!..

அனுபவம் 1:


இரண்டு வாரங்களுக்கு முன்பு மாலை நேரம் 5 மணியளவில்(செங்கல்பட்டு டூ தாம்பரம்) ரயிலில் பயணிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.. கையில் ஐபாட் இல்லாமல் காதில் ஒயர்கள் இல்லாமல் கையில் பெயர் தெரியா எழுத்தாளரின் புத்தகமில்லாமல் நான் பயணிப்பது மற்றவர்களிடமிருந்து என்னை முற்றிலும் வேறுபடுத்தி காட்டியது

என் முன்னே இரண்டு கல்லூரி மாணவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.அதில் ஒருவன் தன்னை ரவுடி போல காட்ட மிக பிராயத்தனப்பட்டிருந்தான்..அவனது உடை, பாவனை, நடவடிக்கை எல்லாம் அப்படி இருந்தது..அருகில் இருந்தவன் அவன் நண்பன் தான் போலும் ஆனாலும் கொஞ்சம் அடிமை தனமாய் அவன் விடும் உதாருக்கு தலையாட்டிக்கொண்டும் சிரித்து கொண்டும் இருந்தான்..


அவர்கள் மடியில் ஒரு புத்தகமிருந்தது,சட்டம் சம்மந்தமான புத்தகம், தமிழில் இருந்தது..இந்த மாதிரி ஆங்கில தமிழ் மொழி பெயர்ப்பு புத்தகங்களை எழுதுவதற்கு தமிழ் பற்றியும் ஆங்கில பற்றியும் சீரிய அறிவு வேண்டும்..என் கல்லூரி நண்பர்கள் விசி ++ ஐ தமிழில் படித்தார்கள் , அந்த புத்தகம் 80 ரூ மட்டுமே..என்னால் 2 வரிகளுக்கு மேல் வாசிக்க இயல வில்லை அந்த அளவு கொடுமை...இடையில் மருத்துவ படிப்பை யாரோ தமிழில் கொண்டு வர வேண்டும் என்றார்கள் அட போங்கடா நீங்களும் உங்க சட்டமும்...

கதைக்கு வருகிறேன்..அவர்கள் செங்கல்பட்டு பக்கத்தில் ஏதாவதொரு கல்லூரியில் படிப்பவர்களாயிருக்க கூடும்,நான் ஜன்னல் வழியே வேடிக்க பார்த்தாலும் அவர்களின் சம்பாஷனையை கேட்பதை தவிர்க்க முடிய வில்லை..
ரவுடி ..அடிமையிடம் எங்கள் கம்பார்ட்மென்டில் ஒரு இருக்கையை கைக்காட்டி ஏதோ சைகை செய்தான்..என் காதுகளை கூர்மையாக்கி கொண்டே.

அடிமை அங்கே சென்று ஒரு பையனை கைப்பிடித்து இழுத்து வந்தான், இழுத்து வரப்பட்ட பையன் துளிர் மீசையுடன்,முகத்தில் முகப்பருக்களுடன் இருந்தான்..ஆனாலும் அவனிடம் ஏதோ வசீகரித்தது..அந்த கிருதாவா அல்லது சர்ட் இன் பண்ணி சுருள் முடியை நேர்த்தியாய் வாரியிருந்ததா என தெரிய வில்லை.. நான் எதேச்சையாக திரும்பியது போல நடித்ததில் இதெல்லாம் பார்க்க முடிந்தது..

அடிமையை இன்னொரு சீட்டில் உட்கார சொல்லி விட்டு,இவன் அந்த பையனை அருகில் உட்கார வைத்தான், உட்கார வைத்தான் என சொல்வதை விட அழுத்தினான் என சொல்லலாம், அவன் இடுப்பின் பின்புறம் கைவிட்டு அவன் எழும்ப முடியாத படி பிடித்துக் கொண்டான்.அந்த பையன் நெளிந்து கொண்டிருந்தான்.

ரவுடி அந்த பையன் இதற்கு முன்னால் இருந்த் இருக்கையை கைகாட்டி ஏதோ நக்கலாய் கேட்டான், சில அருவருக்கத்தக்க கவுதம் மேனன் டைப் டயாலாக்குகள் என் காதில் கேட்டன , அதற்கு அந்த பையன் ஒரு சிரிப்பை பதிலாக கொடுத்து தொடர்ந்து நெளிந்து கொண்டிருந்தான்.

இதற்கு அடிமை எழுந்து வந்து இவன் மேல் கைப்போட்டு..'இப்போவே ஆரம்பிச்சிட்டியாடா? என்னடா பண்ணின அவள?'என்றான் நமுட்டு சிர்ப்போடு,பதிலுக்கு பையன் இப்பவும் சிரித்தான். ரவுடி அடிமையிடம் இவனை ஒப்படைத்து விட்டு மெதுவாய் எழுந்து அந்த பையன் இதற்கு முன்னால் அமர்ந்த இடத்திற்கு சென்றான்.

நான் ஆர்வ மிகுதியில் உடம்பை வளைத்து கொட்டாவி விடுவது போல என்ன நடக்கிறதென பார்த்தேன்...அந்த பையன் இருந்த இருக்கையில் அருகே இன்னொரு பெண் உட்கார்ந்திருந்தாள், ரவுடி அவள் அருகில் சென்று நெருங்கி உட்கார்ந்தான்..அவள் கூச்ச பட்டாள் சிரித்தாள் அவள் உடம்பு அதிர்ந்து கொண்டிருக்க கூடும்.முகத்தில் அதை காட்டாமல் கட்டுப்படுத்த முடிய வில்லை அவளால்.

இங்கே அடிமை தொடர்ந்து அந்த பையனை கேள்விகளால் நச்சரித்தான், "என்னடா சொல்றா அவா?, எப்படிடா புடிச்ச"என்று திரும்பி திரும்பி கேட்டுக்கொண்டிருந்தான்..ரவுடி அந்த பெண்ணின் புத்தகம் ஒன்றை வாங்கி திருப்பி பார்த்து ஏதோ பேசிக்கொண்டிருந்தான், அவள் தயங்கி தயங்கி பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்..


அடிமை பையன் ரவுடி செய்ததை போலவே இவனை இடுப்பை வளைத்து பிடித்து எங்கும் நகரமுடியாமல் செய்திருந்தான், ரவுடி இப்போது அந்த பெண்ணின் பர்சை வாங்கி பார்த்து அதில் ஏதோ தேடிக்கொண்டிருந்தான். அடிமையின் பிடியில் இருந்து இவன் நழுவி எந்திரிக்க பார்த்தான். என் அருகில் இருந்த 'நக்கீரனில் 10 வயது சிறுமி பல முறை பலாத்காரம்'படித்துக்கொண்டிருந்தவரும் இதை கவனித்திருக்க வேண்டும், அவர் புத்தகம் படிப்பது போல இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தாரோ என்னவோ..

கொஞ்ச நேரத்தில் ரவுடி இங்கே வந்து இவனிடன் ஏதோ பேசி பையனை அனுப்பி விட்டான். அந்த பையனும் எழுந்து சர்ட் இன்னை சரியாக செய்து , ஒரு சீப்பை பின் பாக்கெட்டில் இருந்து எடுத்து சீவிக்கொண்டே அந்த பெண்ணின் அருகில் அமர்ந்தான்..கொஞ்ச நேர அவர்கள் ஏதும் பேச வில்லை..

அதற்கு தாம்பரம் வந்து விட்டிருந்தது..நக்கீரம் படித்துக்கொண்டிருந்தவர் புத்தகத்தை விட இங்கு நடப்பது சுவாரசியமாய் இருக்கிறதென நினைத்திருப்பார் போலும் , புத்தகத்தை எடுத்து வைத்து விட்டு இவர்களை கவனிக்க தொடங்கி விட்டார்..

தொடர்ந்து குரோம் பேட்டை வரை பயணித்து என்ன நடக்கிறதென பார் என மனதில் தொடர்ந்து கூக்குரல் கேட்டது...என்னதான் இருந்தாலும் நானும் எல்லாரை போல சாதாரண மனிதன் தான் என்பதை நினைத்து ரயிலை விட்டு இறங்கி நடக்கத் தொடங்கினேன் வீட்டை நோக்கி...

அனுபவங்கள் தொடரும்...

கல்யாணி ஒரு நடிகையாவாள்

$
0
0
கல்யாணி ஒரு நடிகையாவாள் என
யாரும் எதிர்பார்த்திருக்க வில்லை

கல்லூரி கலாட்டா என ஒரு பிரபல
நடிகருடன் ஆறு மாணவிகளில் ஒருத்தியாய்
கலந்து கொண்ட இவளின் குறுமபையும் அழகையும்
ரசித்த நடிகர் இவளை தன் ரஸிகா என பெயர் மாற்றி
தன் அடுத்த படத்தில் அறிமுகப்படுத்தினார்

தொலைக்காட்சிகள் இவள் வெள்ளந்தியாய் பேட்டி
கொடுத்ததை ரசித்த ரசிகர்கள் கனவில்
இவளை நினைத்து சொப்பன்ஸகலித்தம் செய்தனர்

வரிசையாக திரைப்படங்கள் முண்ணனி நடிகர்களுடன்
தமிழக அரசு விருது என அவள் வாழ்கை தடதடத்தது

3 வருடங்களுக்கு பின்...


அடுத்தடுத்த இரண்டு காதல் தோல்விகள்
ஒரு திருமணம்
மூன்று தற்கொலை முயற்சிகள்
என அவள் வாழ்க்கை பத்திரிக்கை செய்தியாகியது

இப்போது அவள் வாரப்பத்திரிக்கையொன்றில்
வாசர்களின் அந்தரங்க பிரச்சினைகளுக்கு
பதில் சொல்லிக்கொண்டிருக்கிறாள்

எனக்கு பிடித்த இளையராசாவின் பாடல்கள்

$
0
0
இளையராஜா என்பதை விட இளையராசா எனக் குறிப்பிடும் போது இன்னும் நல்லா இருக்கு:)

ஓகே இளையராசாவின் இசைத் திறமையையோ அவரின் புகழ்பாடவோ இந்த பதிவு இல்லை என்பதை முதலிலே சொல்லி விடுகிறேன் எல்லாம் பாதுகாப்பு காரணம் தான் ஹி ஹி

அவருடைய பிரபல பாடல்கள் எல்லமே சின்னக் குழந்தைக்கு கூட மனைப்பாடமாக இருக்கும் ஆனால் அவருடைய பிரபலமாக அதிகமாக பேசப்படத பல சிறந்த பாடல்களை பற்றி தான் இங்கே அலச போறோம்

ஒரு வேளை இந்த பாடல்களில் பல உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம்,பிடித்திருக்கலாம் மாற்றுக்கருத்தும் கூட இருக்கலாம் எல்லாவற்றையும் இங்கே பதிவு செய்யுங்கள்

மோகன் பாடல்கள் ,அவருடைய ஜனனி பாடல்களை விட்டு விட்டு அவர் இசையமைத்து ஓடாத சில படங்களில் பற்றி முதலில்



'என்னுள்ளே என்னுள்ளே'என்ற பாடல் வள்ளி படத்திலிருந்து..இந்த படத்தை கடையம்(எங்க ஊரு)கோபாலகிருஷ்ணா தியேட்டரில் பார்த்தது இன்னும் நினைவிலிருக்கிறது
ரஜினி தயாரிப்பில் வந்த இந்தப்படம் பெரும்தோல்வியை தழுவியது..இந்த பாடல் தான் படத்தின் முக்கிய கட்டம்..நகரத்திலிருந்து வந்த ஒரு இளைஞர் கூட்டம் ஹீரோயின் ஊரில் டெண்ட் அடித்து ஆட்டம் போடுகிறது அதில ஒரு இளைஞன் பரதநாட்டிக்காரனாயிருக்கிறான்

அவன் மேல் ப்ரியம் கொண்ட ப்ரியா அவனுடன் ஆடியபடியே தன் கற்பை இழக்கும் தருணத்தில் வரும் பாடலிது.இந்த பாடலை பலமுறை கேட்டுப்பாருங்கள் அடிமையாகிவிடுவீர்கள்..இந்தப்பாடலை பார்க்க நீங்க மிட்நைட் வரை முழிக்கனும் ஆமா மசாலமிக்ஸ் அல்லது ஆலிங்கனம்(கேப்டன் டிவி :))யில் இரவு 12 க்கு மேல் பார்க்கலாம்..இதெல்லாம் உனக்கெப்படி தெரியும்னு நீங்க கேட்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்



அடுத்தது 'என்னுள்ளே ஏனோ'ரோசாப்பூரவிக்கைகாரி படத்திலிருந்து இதுவும் கில்மா பாடலாகியதில் பெரும்வருத்தம் எனக்கு இல்லையென்றால் பகலிலே பார்க்கலாம்..இந்த பாடலில் இடையிடையே ரவிச்சந்திரன்(Actress Lakshmi sமுன்னாள் கணவருள் ஒருவர் என ஐயம்!!)வரும் வசனங்கள் தான் இந்த பாடலை இன்னமும் அழகாக்கியிருக்கிறது என்பது என் திண்ணம்.



'அந்த இடம் ரொம்ப அழகாயிருக்கும் உங்களுக்கு ஆட்சேபனையில்லைனா'என வில்லன் டயலாக் பேசி ஹீரோயினை கபளீகரம் பண்ணும் பாடல்..இன்னமும் ராசா அவருடைய கான்சர்டோவில் விரும்பி இசைக்கும் பாடலிது

கேட்டு பாருங்கள்!!!



நெக்ஸ்ட் அலைகள் ஓய்வதில்லை படத்தில் வரும் 'விழியில் விழுந்து'..வைரமுத்துவின் முதல் பாடல்.இந்த பாடலுக்கு என்ன சிறப்பென்றால் அப்போதே ரெண்டு வெர்ஷன் கான்செப்ட்டை ராசா அறிமுகப்படுத்தியிருப்பார்..ஒரு பாடல் கவிதை வாசிப்பது போலவும் இன்னொரு பாடல் வேகமாயும் வரும்.



இது நல்ல பிரபலமான பாடலென்றாலும் ரெண்டு வெர்ஷனையும் கேளுங்கள்

அடுத்தது 'கோடைகாலக்காற்றே'ப்ரம் 'பன்னீர் புஷ்பங்கள்'படம்..இந்தப் படத்தின் எல்லா பாடல்களும் மெகா ஹிட் ஆனா இந்த பாட்டு தான் என்னோட பேவரைட்..பள்ளிமாணவர்கள் ஊட்டியில் சிக்ஸ்த் மைலில் டூரில் இருக்கும் போது பிரதாப் பள்ளி வாத்தியார் பாடும் பாடலிது..தூக்கம் வரலைன்னு பியர் அடிப்பவர்களா நீங்க இந்தப்பாடலை கேளுங்க 75 ரூபாய் மிச்சம்



இந்தப்படத்தின் ஸ்பெசாலிட்டி இதன் டைரக்கடரு நம்ம பி.வாசு நம்பமுடியலை தானே அவசரப்படாதீங்க அவருடன் சேர்ந்து நம்ம சந்தானபாரதியும் இயக்கியிருக்கிறார் இப்ப புரியுதா படம் ஏன் ஓடிச்சுன்னு

இன்னொரு விஷயம் இந்தபட ஹீரோயின் தான் நேருக்குநேர் படத்தில் சூர்யா அக்காவாய் வரும்!!

மீண்டும் சந்திப்போம் இன்னும் சில கிளாசிக் பாடல்களுடன்

தமிழ் இ புத்தகங்கள்

ஆகாயத்திலிருந்து பார்க்கும் போது

$
0
0
சென்னையை ஆகாயத்திலிருந்து பார்க்கும் போது பேரானந்தம்…வாரக் கடைசிகளில் சோமபானமருந்தி எத்தனையோ முறை காற்றில் பறந்திருக்கிறேன்,ஆனால் இம்முறை உண்மையாகவே!!




மழை நாளில் கிளம்பினேன் அங்கிருந்து.. இல்லை இல்லை நான் கிளம்பியதால் தான் மழையோ என்னவோ…சென்னை விமான நிலையம்..சிரித்து சிரித்து பயணிகளை கவனிக்கும் விமான நிலைய பணியாளர்களின் பொறுமை,செக்கியூரிட்டி பீப் ஒலிகளை கடந்து வரும் வரை இருக்கும் பதற்றம்..இவற்றை எல்லாம் கடந்து அலுமினிய பறவையில் ஏறி அமர்ந்து சொல்வதற்கு முன்னரே சீட் பெல்ட்டை மாற்றி உட்கார்ந்திருந்தேன்

(மச்சி சீட் பெல்ட்டை எப்போதும் போட்டுக்கோ டர்புலன்ஸ் ஹிட் ஆகும் , டேக் ஆப்லயும்,இறங்கும் போது..நண்பர்களின் அட்வைஸ் தூறல்கள்)



சென்னையை ஆகாயத்திலிருந்து பார்க்கும் போது பேரானந்தம்…காது அடைப்பத்தற்கு முன்னரே 700 ரூபாய் கொடுத்து வாங்கி வைத்திருந்த காஸ்ட்லி பஞ்சை அடைத்திருந்தேன்.



பிரேக்பாஸ்ட்டை தவிர்த்தேன்,ஜன்னல் சீட் வாங்கிருந்தேன்.விமான இறக்கைகள் அநியாயத்துக்கு அசைவது அடிவயிற்றில் அபாய மணியை அடித்துக்கொண்டிருந்தது



சில வருடங்களுக்கு முன்னர் பார்த்த

விமான கிராஷ் வீடியோக்களை யாரோ கண் இமைகளை திறந்து விழித்திரைக்கு சினிமாஸ்கோப்பில் ஓட்டிக்காட்டுவது போலிருந்தது.



அபுதாபியில் இறங்கி கறுப்பு தோல் மனிதர்களின் பின்னர் அச்சு பிசகாமல் நடந்தேன்.



காத்திருக்கும் வேளையில் கவனித்ததில் எல்லார்

கையிலும் டாப்ல்ட்,லாப்பி,மொபைல்..தமிழர்கள் தமிழை தவிர்த்தார்கள்(மாமா கோயிங்க் டு ஈட் சம் பிரட்..குட்டு கோயிங் டு பிலேயிங் வித் ஹிஸ் டால்ல்…ஒரு தாய் தன் 1 வருட குழந்தையிடம்.,,)..என்னை போலாவே பர்ஸ்ட் டைம் டிராவலர்கள் நாங்ள் கண்களால் ஹாய் சொல்லிக் கொண்டோம்

2 மணி நேர காத்திருத்தலுக்கு பின்னே இன்னும் சற்றே பெரிய பறவையில் ஏறி அமர்ந்திருந்தோம்,அபுதாபி பணி பெண்கள்

அவர்களின் பாரம்பரிய உடைகளில் சீட் பெல்ட் அணிய சொல்லி அன்பு கட்டளையிட்டார்கள், நாம் தன் முதல்ல்யே ரெடி ஆயிருப்போம்லா..இந்த முறையும் விண்டோ சீட் தான். இன்னும் பெரிய இறக்கை வேறு கேட்கவா வேணும்..



அடிவயிற்றில் வைரமுத்துவின் உருண்டைகள் உருள தயாராகிக்கொண்டிருந்தது.வெள்ளைக்கார பணிப்பெண்கள் அராபு உடை அணிந்திருந்தது

வித்தியாசமாயிருந்தது.



டேக் ஆப் டைம்….அதிவேகத்தில் போய் ரன் வேயிலிருந்து மேலெழும்பும் கடைசி நொடியில் ..அது நடந்தது.



அவசரமான பிரேக்..வேகமாய் டூ வீலரில் போயிக்கொண்டிருக்கும் போது ஸ்பீட் பிரேக்கரை பார்த்து போடும் பிரேக் போல..அப்போ விமானத்துக்கு வேகத்தடை போட்டால் எப்படி இருக்கும்..உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்

அப்போ விமானத்துக்கு வேகத்தடை போட்டால் எப்படி இருக்கும்..உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்

சீட் பெல்டுடன் என் பேண்ட் பெல்டும் இணைத்து முடிச்சு போட்டிருந்ததால் நான் சேப், சரியாக பெல்ட் போடாமால்,நாங்கெல்லாம் கம்பிய பிடிக்காமயே பஸ்ல வருவோம்ல சங்க உறுப்பினர்கள் கொஞ்சம் கஸ்டப்பட்டார்கள்.



எல்லார் முகத்திலும் பதற்றம்,பயம்..ஒரு வித கலவையான ரியாக்சன்ஸ்..என் அருகில் அப்போது தான் பழக்காமன கோவை தமிழர் ஒருவர் ஆங்கிலத்தில் ‘இந்நேரம் திருப்பதிக்கு தலைகீழா நடந்து வருவேன்னு வேண்டிருப்பீங்களே’ என்றார், எனக்கு கடவுள் நம்பிக்கையிலைங்க ஹி ஹி..சிரித்து வைத்தேன்



இப்போ கேப்டன் பேசுவார் என க்ரூஸ் ஹெட் எடுத்து கொடுத்தார்

கேப்டன் ஜெர்ரி பேசினார்..மன்னிப்பு கேட்டார்..யோவ் ஸ்பீட் பிரேக்கர் இருக்கிறது முன்னமே பார்க்க மாட்டியா??



ஒரு இன்ஜினில் தீப்பொறி வந்ததை கவனித்தோம்,நாம பார்க்கிங் போயி செக் பண்ணிட்டு கிளம்புவோம்..மறுபடியும் மன்னிப்பு கேட்டார்



சாப்பாடு டோக்கன் கொடுத்து சாப்பிட்டு காத்து வாங்க சொன்னார்கள், சில பெரிசுகளுடன் சேர்ந்து கொண்டேன்,எல்லாரும் தமிழ் தான் ஆனால் ஆங்கிலத்தில் பேசினார்கள்..இந்தியாவின் லஞ்சம் பற்றி..

இவ்வளவு சீக்கிரம் பீட்சா சாப்பிட வேண்டிய இருக்கும் என எதிர்பார்க்க வில்லை..காப்பியில் பால் இல்லை..தண்ணீருக்கும் காசு



5 மணி நேரம் காத்திருப்பிற்க்கும் சண்டைக்கும் பின்னே இன்னொரு பழைய பறவையை கை காமித்தார்கள்



ஏற்றிக்கொண்டது எங்களை பறக்க ஆரம்பித்தது..இந்த முறை விநோதமான சில சபதங்கள் வரவே என்னருகே இருந்த பணிப்பெண் ‘சத்தம் வருத்துல்ல?’ அது முடிக்கும் முன்னரே வேகமாக தலையாட்டினேன்



கேப்டனிடம் பேசிட்டு ‘அது சும்மா பிரசரு ன்னு எச்சி விழுங்கியது’ நான்: ஓ ஓகே

செட்டில் ஆகியது,சீராக போய்க்கொண்டிருந்தது. முன்னர் இருந்த பாக்சில் ஒரு அராபிய படமும், கொரியன் மூவியும் பார்த்தேன்..தமிழ் பாடல்கள் கேட்டேன். தமிழ் படங்கள் சுறாவும்,ஆதியும் இருந்தது.ஏற்கென்வே நொந்து மேகி நுடுல்ஸ் ஆகியிருப்பதால்..இளைய தளபதியை தவிர்த்தேன்.



14 மணி நேர பறப்பிற்க்கு அப்புறம் மெதுவாய் ஜன்னல் எட்டிப்பர்த்தேன் விட்டில் பூச்சிகள் போல விளக்குகள்..சிகாகோ குளிருடன் வரவேர்த்தது



அதிகாரிகளின் கேள்விக்கு பதில் சொல்லி விட்டு,ரெடிமிக்ஸ் அயிட்டம்களை காட்டி விட்டு பேகேஜ்களை எடுத்து கொண்டு இணைப்பு விமானத்தை நொக்கி போனேன்..அந்த ஊருக்கு போகும் கடைசி பஸ்ஸும் போய்விட்டதால் ஓட்டலில் இரவை களிக்க சொன்னார்கள்..இடையில் ஒரு பாகிஸ்தான் பேரழ்கி



இடையில் ஒரு பாகிஸ்தான் பேரழகி ..கிரிக்கெட்டில் மட்டும் தான் உங்களுக்கும் நாங்கள் எதிரி என ப்ரிபேர் பன்ணிக்கொண்டிருந்தேன்..டு யூ நீட் எனி ஹெல்ப் என ஒரு நார்த்தி காய் நகர்த்தினான்

நான் டிவில பார்த்துக்கிறேன் என ஒதுங்கி விட்டேன்.



மறுநாள் காலையில் எழுந்து குளித்து ஓடி கேப் பிடித்து மறுபடியும் குட்டி டிராகனில் ஏறி சின்சினாட்டில் இறங்கி..நண்பனின் அறையை வந்தடைந்தேன்



வணக்கம் அமெரிக்கா…



அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது

$
0
0
சமீபத்தில் படித்த புத்தகம்ஸ் :

அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது-எஸ்.ரா

வாசக பர்வம் -எஸ்.ரா

வாசகர் பர்வம் இது போன்ற அனுபவ கட்டுரைகள் தான் எஸ்ராவின் பலமென தோன்ற்கிறது..இந்த புத்தகத்தில் அவர் வாழ்வில் சந்தித்த தமிழ் எழுத்தாளர்களையும் பற்றியும் அவர்களிடம் பழகிய நாட்கள், அவர்களை தூர இருந்து ரசித்தது பற்றி, அவர்களிமிருக்கும் குழ்ந்தை தனம் பற்றி என நீளுகிறது ..தினமும் ஒரு கட்டுரை என இன்று தான் படித்து முடித்தேன்

இதில் சில கட்டுரைகளை இணையத்தில் அவரது பக்கத்தில் படித்தமையால் கொஞ்சம் ஏமாற்றமேற்படுகிறது , உயிர்ம்மை பதிப்பகம் ஒவ்வொரு புத்த்கத்துகும் நிர்ணயிக்கும் விலையும் பீதி கிளப்புகிறது

அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது பற்றி தனியாக எழுதுகிறேன் அவ்வளவு இருக்கிறது எழுத

சமீபத்திய பயணம்



சொந்த ஊருக்கு போனது தான்..பொங்கல் சாக்கில் பழைய நண்பர்களை பார்க்க முடிந்தது..எல்லாரிடமும் செல்போனிருக்கிறது ..சில பேரிடம் நம்பர் பரிமாறிக்கொள்ள கூட தோண வில்லை.

நண்பர்களை நீண்ட நாள் கழித்து பார்க்கும் போது போய் டீ அடித்துக்கொண்டே பேசும் பழக்கம் மாறி வா மச்சி ஒயின்ஷாப் போய் ஒரு பீர் போடலாமென விட்டது..

டிவி பார்க்கும் ஆர்வம் குறைந்து, இலக்கில்லாமல் சுற்றும் ஆர்வம் அதிகமாகியிருக்கிறது எனக்கு

வேலியில் தலையாட்டிக்கொண்டிருந்த ஓணான்களை ஒன்று செய்யும் செய்யாமல் கடந்தது எனக்கே ஆச்சர்யமளித்தது

போகும் போது ரயில்களில் ஐடி இளைஞர்களும் யுவதிகளும் காதுகளில் ஒயர் மாட்டிக்கொண்டும் இரவு முழுக்க போர்வை போற்றி பேசிகொண்டிருந்ததும் பார்த்த போது ‘நம்ம ஊரையாது விட்டு வைங்கடா வென கத்த தோன்றியது‘

கொஞ்ச நேரம் கிரிக்கெட் விளையாடி விட்டு , உடன் விளையாடி பசங்களுக்கு பொங்கல்படி கொடுத்துவிட்டு ரயிலேறிவிட்டேன்

சமீபத்தில் பாதித்த சம்பவம்

ஐயப்பன் கோவிலில் கூட்ட நெரிசல் அதிலும் தமிழர்கள் பலர் இறந்தனர்



இந்த முறை டிவியில் மகரஜோதி பாதி பார்த்துக்கொண்டிருந்த அப்பா ‘கருடன் வரவேயில்லை சகுனம் சரியில்லை‘ என உச் கொட்டிகொண்டிருந்ததும், பேருந்தில் Sடேசன் செல்லும் போது ரெண்டு பெருசுக ‘இஅவனுக காசு வாங்கிட்டு எல்லாவனையும் உள்ளெ விட்டுபுடுறானுக, பொண்ணுக எல்லாம் பக்கத்திலயே நின்னு சாமிய வெறிக்குதுக, மலைக்கு போற பய ஒருத்தன் கூட ஒழுங்கா விரதமிருக்கிறதில்ல,பொறவு இப்படிதானே நடக்கும்‘என பேசிக்கொண்டிருநததும் யோசிக்க வைத்தது.

சமீபத்தில் பார்த்த ரசித்த பெண்:

Office Cafeteria வில் 1.22.13 க்கு தினமும் வரும் அந்த மலையாள பெண்..அப்படி ஒரு அழகு..என்ன ஒரு சின்ன பிரச்சினை கூட வரும் அந்த ஹிப்பி வச்ச மங்கி பையன் தான்..அடிக்கடி தொட்டு பேசுறான்..அவனை மட்டும் அவட் ஆப் போகஸ் ல தள்ளுனா சூடான செம்மீன் கறி ரெடி




சமீபத்தில் விழுந்து விழுந்து சிரித்தது:

புருஷன்: ஏண்டி இவன் தான் உன் கள்ளக்காதலனா..பிச்சைக்காரன் மாதிரி இருக்கான்

மனைவி: குடிச்சிட்டு கண்ணாடி முன்னாடி நின்னு உளறாம மூடிக்கிட்டு போய் படுங்க (உங்களுக்கு சிரிப்பு வரலையா???? அப்போ ஒண்ணியும் பண்ண முடியாது)

சமீபத்தில் எழுதிய பதிவு:இது தான்

சுஜாதா வாரம் -1 ....சுஜாதாவின் கவிதை ஒன்று

$
0
0
சுஜாதா அவர்களின் உடல் (உடன்) கவிதை இதுவரை படிக்காதவர்களுக்கு இந்தப் பதிவு. சர்வதேச குழந்தைகள் வருடம் அறிவிக்கப்பட்டபோது, அன்னார் எழுதிய கவிதை இது. 

 கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய் கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய் பாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய் பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய் சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய் சந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள் பிடிப்பாய் காஜா அடிப்பாய் கட்டடத்தில் கல் உடைப்பாய் கார் அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய் மேஜை துடைப்பாய் மேட்டினியில் இடிபடுவாய் மெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டு விற்பாய் கூஜா எடுத்துப்போய் குடிதண்ணீர் கொணர்வார் கூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய் ராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம் ராஜ்ஜியம் முழுவதுமே விழா எடுக்கப்போகின்றோம் திரைப்படங்கள் எடுப்போம் திண்பண்டம் தந்திடுவோம் தீவிரமாய் உன்நிலைமை உயர்த்துவது பற்றி வரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைப்பிடித்து வருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம் குறைபட்டுக் கொள்ளாதே கொஞ்ச நாள் பொறுத்திரு கூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள் சிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம் சில்லறையாய் இல்லை போய்விட்டு அப்புறம் வா !

இந்த படமெல்லாம் தமிழில் வருவதற்கு முன்னர் தயய் செய்து பார்த்துவிடுங்கள்

$
0
0
சமீபத்தில் பார்த்த படங்கள்:நண்பர் கம் பிளாகர் கொடுத்த ‘The Band’s visit’ பார்த்தேன்..வாவ் ..வார்த்தையில் விவரிக்க முடியாத உணர்வு அது..என்ன அருமையான நடிகர்கள்,இயல்பான நடிப்பு..எளிமையான கதை..அட்டகாசமான ஒளிப்பதிவு .மிகமுக்கியமாக பின்னனி இசை எகிப்தை சேர்ந்த ஒரு பேன்ட்(இசைக்குழு) இஸ்ரேலுக்கு வருகிறது அவர்களுக்கு அங்கு இசை நிகழ்ச்சி நடத்த அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது.. ஆனால் போக வேண்டிய இடத்திற்கு பதிலாக இவர்கள் வேறு ஒரு இடத்தில் இறங்குகிறார்கள் அங்கு ஒரு உணவகத்தில் உரிமையாள பெண்ணிடம் உதவி கேட்கின்றனர் அன்று இரவு அவர்களை அங்கு அவள் தங்க அனுமதிக்கிறாள்.. அந்த இரவில் என்ன நடக்கிறது இது தான் கதை..ஒரு இரவு இவ்வளவு நீண்டதா என் யோசிக்க வைத்த படம்.. யோசித்து பார்த்தால் இரவு நீளமானது தான்..2006 ல் நான் ஒரு பிளாகில் படித்த அந்த அருமையான கவிதை இப்போது நினைவிற்கு வருகிறது “அந்த இரவில் அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ்க்கு தொலைபேசுபவன் மேல் உலகின் கை எழுதுகிறது உலகின் மிக நீண்ட இரவிற்கு தயாராகுங்கள்” வார்த்தைகள் சரியாக இல்லை ஆனால் அர்த்தம் இது தான். இந்த படத்தில் குறிப்பிடத்தக்க விஷயங்கள் அந்த பேன்ட் தலைவரின் அருமையான நடிப்பு ..அந்த மிடுக்கு இளைஞனின் நடிப்பு..அந்த உதவி தலைவரின் நடிப்பு.. இந்த படமெல்லாம் தமிழில் வருவதற்கு முன்னர் தயய் செய்து பார்த்துவிடுங்கள் 

சமீபத்திய பயணம்: என் சொந்த ஊருக்கு 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கடந்த மாதம் சென்றேன் ..இங்கிருந்து மங்களூர் மங்களூர் மெயிலில் கோவை வழியாக பயணம் சின்ன வயது நியாபகங்கள் அலைமோதியது.சொர்ணூரில் புரோட்டாவும் வாங்கியது எப்போது டா பேக்கல் கோட்டை(உயிரே படத்தில் வரும் அந்தக்கோட்டை, அப்புறம் மனிஷா பாட்டி ஓடி வரும் அந்த இடங்கள் எல்லாத்தையும் மனைவிக்கு சின்னக்குழந்தையின் குதுக்கலத்தோடு காமித்துகொண்டே வந்தேன் காசர்கூடில் வரும் அத 2 நிமிட குகை..மங்களூருக்கு முன்னாடி வரும் நேத்ராவதி ஆறு என எல்லாவற்றையும் மீண்டும் பார்த்ததில் மனது நிறைந்தது

சுஜாதா பற்றி பாலுமகேந்திரா

$
0
0
சாலிகிராமத்திற்கு வேறு வேலையாகப் போயிருந்த நாம், அப்படியே பாலுமகேந்திராவையும் சந்திக்க நேர்ந்தது. நாம் போன சமயம் சில போட்டோக்களை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு மேல்நாட்டு நாயின் பல தரப்பட்ட போஸ்கள். ''ரொம்ப அழகா இருக்கு சார். உங்க நாயா?''என்று கேட்டோம். ''இல்லை. எழுத்தாளர் சுஜாதாவோட நாய்''என்றார். இதைத் தொடர்ந்த பாலு மகேந்திராவுடனான நீண்ட உரை யாடலின் சுருக்கம்:_ ''போன டிசம்பர்ன்னு நெனைக்கறேன். மனசளவில் நான் ரொம்பவும் உடைஞ்சு போயிருந்த ஒரு நாள். அந்த மாதிரி சமயங்கள்ல நேரா என் ரங்காகிட்டப் போய் நிக்கறதுதான் என் வழக்கம். உங்க எல்லாருக்கும் அவர் சுஜாதா. எனக்கு அவர் ரங்கா. 'எனது பால்யகால நண்பர்களெல்லாம் என்னை ரங்கான்னுதான் கூப்பிடுவானுங்க. அவனுங்கெல்லாம் செத்துப் போயிட்டானுங்க. இப்போ பாலு மட்டும்தான் என்னை ரங்கான்னு கூப்பிட்டுக்கிட்டிருக்காரு.'கற்றதும் பெற்றதும் தொடர்ல இப்படிப் பதிவு பண்ணியிருந்தார். முப்பது வருஷ நட்பு. ரொம்ப நெருக்கம். அவரை என் கூடப் பொறந்த அண்ணனாத்தான் நான் நெனச்சேன். 'பாலுவுக்கும் எனக்குமான நட்பு வாழ்வின் சுக துக்கங்களுக்கு அப்பாற்பட்டது'அப்படின்னு இன்னுமொரு கட்டுரையில எழுதியிருந்தார். மனசு நெறைஞ்ச துக்கத்தோட அவர் முன்னாடி போய் நின்னதுதான் தெரியும். உடைஞ்சு அழுதிட்டேன். குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழுதுக்கிட்டிருந்த என் கையைப் புடிச்சுத் தன் கைக்குள்ள பொத்தி வெச்சுக்கிட்டு அழுது முடியட்டும்ன்னு அமைதியா உக்காந்திருந்தார். என் அழுகை கொஞ்சம் நின்னதும், ரொம்பவும் கனிவான குரல்ல என் முகத்தப் பார்த்துக் கேட்டார். 'என்னப்பா ஆச்சு?'சொன்னேன். ரொம்ப ரொம்ப நம்பிக்கையான ஒருத்தர் எனக்குச் செய்திருந்த வஞ்சனை, ரங்காவையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கணும். ஆனா, அத வெளிக்காட்டிக்கல்ல. அவர் கைக்குள்ள இருந்த என் கையை இன்னும் கொஞ்சம் இறுக்கிக் கிட்டுச் சொன்னார்... ''பாலு, நீ பாக்காத, பிரச்சினையா? நீ அனுபவிக்காததுக்கமா? எல்லாத்தையும் கடந்து வந்தவனில்லையா நீ? அதெல்லாத்துக்கும் முன்னாடி இது ஜுஜுபி... This is nothing..... தூக்கிக் கடாசிட்டுப் போயிட்டே இரு. Don't let this unworthy person ruffle you.நீ செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. ஒரு Heart Problem ஒரு Stroke/ இது ரெண்டுக்கப்புறமும் நீ ஜம்முன்னு நடமாடிக்கிட்டிருக்கே. Isn't this wonderful. Be happy that you are alive Balu. உன்னை நெஞ்சுக்குள்ள வெச்சுப் பூஜிக்கற நிறையப் பேர் இருக்காங்க. அவங்களுக்காக நீ செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. You Still Can Create Magic. உன் 'வீடு', 'சந்தியாராகம்'மாதிரி நீ இன்னும் ஒரு அஞ்சாறு படங்களாவது பண்ணணும். So don't let these stupid things bother you. You are a king Balu. Don't you ever forget that. அதுக்கப்புறம் அவரோடு ஒரு அரைமணி நேரம் உட்கார்ந்து, மாமி போட்டுக் குடுத்த டிகிரி காப்பி சாப்பிட்டுத் திரும்பி வர்ரப்போ மனசு ரொம்ப லேசாயிட்ட மாதிரி ஒரு feeling. என் ரங்காவை நான் கடைசியாப் பாத்தது அன்னிக்குத்தான். ''Be happy that you are alive Balu''ன்னு சொன்ன என் ரங்கா இப்போ இல்லை. அவர் இறுதிச் சடங்குகளுக்குப் போய் வந்ததோட சரி. அதுக்கப்புறம் அவர் வீட்டுக்குப் போகல்ல. அந்தம்மாவைப் பாக்கற தைரியம் இன்னும் வரல்ல. ஆறுதல் சொல்றதுக்குன்னு போய், அவங்க முன்னாடி நானே உட்காந்து அழுதிட்டு வர இஷ்டமில்லை. நேத்து ஆஃபீஸ்ல எதையோ தேடுறப்போ மிம்மியோட இந்த போட்டோஸ் கண்ல பட்டுது. 'மிம்மி'ங்கறது ரங்கா வீட்டில் வளர்ந்த செல்லப்பிராணியின் பெயர். பெண் நாய், டேஷ் ஹவுண்ட் ஜாதி. அவரைவிட மிம்மி மேல அந்தம்மாவுக்குப் பாசம் அதிகம். செல்லம் அதிகம். 'மிம்மி'யோட முதல் பிரசவம் அவங்க மடியிலேயே நிகழ்ந்ததுன்னா பாருங்களேன். பழைய பெட்ஷீட் ஒண்ணை மடியில விரிச்சுப் போட்டு, பிரசவ வலி கண்ட மிம்மியைத் தூக்கி மடியில வெச்சுக்கிட்டாங்க. ஏழெட்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு விஷயம்... மிம்மியை வீட்ல தனியா விட்டுட்டுப் போகணுமேங்கறதுக்காகவே, அமெரிக்காவில் இருக்கற மகன்களைப் பார்க்கப் போறதைத் தள்ளிப் போட்டுக்கிட்டு வந்தாங்க. விஷயம் தெரிஞ்சதும் நான் சொன்னேன்:_ ''நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா அமெரிக்கா போய் பசங்களைப் பாத்திட்டு வாங்க. நீங்க வர்ர வரைக்கும் மிம்மியை நான் என் வீட்ல வெச்சுப் பாத்துக்கறேன்.''ரங்காவும், மாமியும் அமெரிக்கா போய் வர்ற வரைக்கும் ஆறு ஏழு மாசம் மிம்மி எங்க வீட்லதான் இருந்திச்சு. எங்க சுப்பிரமணியோட சேத்து மிம்மியையும் பாத்துக்கிட்டோம். சுப்பிரமணின்னா _ 'மூன்றாம் பிறை'ச் சுப்ரமணி. வளர்ந்து பெரியவனாகி எங்க கூடத்தான் இருந்தான். மிம்மி பெண் நாய் என்கறதால சண்ட சச்சரவில்லாம நல்ல சினேகிதமாவே இருந்திச்சுங்க. சுப்பு இவனைப் பாலியல் கண்ணோட்டத்தில அணு காமல் பார்த்துக் கொள்வது எனக்கும், அகிலாவுக்கும் பெரிய வேலையாகிவிட்டது. ரங்காவும் மாமியும் அமெரிக்காவில இருந்து வந்ததுக்கப்புறம், மிம்மியை அவங்களுக்குத் திருப்பிக் குடுக்க என் அகிலாவுக்கு மனசே இல்லை. ஒருபடியா அவளைச் சமாதானப்படுத்தி மிம்மியைக் கொண்டு போய்க் குடுத்திட்டு வந்தேன். இப்போ என் ரங்கா இல்லை. சுப்பிரமணி இல்லை. மிம்மியும் இல்லை. முதல்ல போனது சுப்பிரமணி. அதுக்கப்புறம் மிம்மி. போன பெப்ரவரியில ரங்கா...''தொடர்ந்து பேசிக்கொண்டே வந்த பாலுமகேந்திரா மேற்கொண்டு பேசமுடியாமல் நிறுத்தி கண்கலங்கு கிறார்..

தாமரையும் தமிழும்

$
0
0
தாமரை அழகான கவிஞர் , வைரமுத்துவின் கம்பீரம் மாதிரி, வாலியின் ஆளுமை மாதிரி தாமரையும் தமிழும். கோவையில் கல்லூரி அளவில் நடந்த கவிதை போட்டியில் இவர் கவிதை முதல் பரிசு பெற, பரிசை கொடுத்தவர் நம்ம தலை சுஜாதா. நிறைய கவிதைகள் எழுதுங்க , இலக்கியத்தில் சிறந்த விளங்க இவர் வாழ்த்த , பதிலுக்கு அம்மிணி 'எனக்கு சினிமாக்கு பாட்டெழுதனும்,பெரிய ஆளா வரணும் னு 'பதில் சொன்னாங்களாம்'(கற்றதும் பெற்றதும்). கவுதம் படங்கள் தவிர அவருக்கு மற்ற டைரக்டர்கள் வாய்ப்பு தர வில்லை(இப்போ தான் பேரரசுவே எல்லா பாட்டையும் எழுதுறாறே!! உங்க அப்பா பேரு ரங்கமணி அம்மா பேரு தங்கமணி ரெண்டு பேரும் சேர்ந்து புட்டா கோவில் மணிடோய்'என்ன லிரிக்ஸ்.... ) தனக்கு காதல் பாடல்கள் மட்டுமில்லாமல் மற்ற பாடல்களும் வருமென நிரூபித்த பாடல் 'கற்க கற்க (VV)'. எளிமையான வரிகள், புதுபுது வார்த்தைகள், விரசமில்லா பாடல்கள் இது தான் தாமரையின் பலம். இதோ அவரது லிரிக்ஸில் ஒரு பாடல். வசீகரா என் நெஞ்சினிக்க - உன் பொன் மடியில் தூங்கினால் போதும் அதே கணம் என் கண்ணுறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே! ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே! அடை மழை வரும் அதில் நனைவோமே குளிர் காய்ச்சலோடு ச்னேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய் அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும் எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும் சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும் (வசீகரா...........) தினம் நீ குளித்ததும் எனைத் தேடி என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை திருடன் போல் பதுங்கியே திடீர் என்று பின்னாலிருந்து எனை நீ அணைப்பாயே அது கவிதை யாரேனும் மணி கேட்டால் அதைச் சொல்லக் கூடத் தெரியாதே காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே

சுஜாதா ஸ்பெசல்-"ஸ்ரீரங்கத்து தேவதைகள்"

$
0
0
Image Hosted by ImageShack.us"ஸ்ரீரங்கத்து தேவதைகள்"டிடி1-ல் வந்தது பெரும்பாலான அன்பர்களுக்கு தெரியாதிருக்கலாம். காரணம் அனேகம் பேர் தூர்தர்ஷன் இணைப்பே இல்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள். சதா சன்விஜயராஜஜெயபாரதி உலகில் வாழ்கிறார்கள். கேபிள் டிவிக்காரர்கள் சாஸ்திரத்துக்கு தூர்தர்ஷன் இணைத்தாலும் அது நான்காகத் தெரிகிறது. அதனால் தூர்தர்ஷனைத் தௌ¤வாகப் பார்ப்பதற்கு 75 ரூபாய் கொடுத்து ஒரு சேஞ்ச்- ஓவர் ஸ்விட்சு வைக்க வேண்டியிருக்கிறது. தூர்தர்ஷன் மெல்ல மெல்ல நகர்ப்புறம் தவிர்த்த தடமாகிக் கொண்டிருப்பதை ப்ரசார் பாரதி கவனிக்க வேண்டும். "ஸ்ரீரங்கத்து தேவதைகள்"என் சிறுகதைகளின் தொகுப்பு. அவைகளின் இரண்டு பொது அம்சங்கள் ஸ்ரீரங்கமும் அதை நினைவுகூரும் இளவயது நானும்தான். சிறுகதைகளைத் தொடராக தரும்போது உள்ள சங்கடம் விளம்பரதாரர்கள் கேட்கும் ரிப்பீட் ஆடியன்ஸ் இல்லாதது. ஓர் எழுத்தாளனுக்கு தன் கதைகள் திரைப்பட அல்லது தொலைக்காட்சி வடிவில் வரும்போது முழுத் திருப்தி இருப்பதில்லைதான். ரேவதி என் அடுத்த 'டி.என்.ஏ.'கதையைப் பார்த்தபோது இந்த மாதிரி கெடுத்திருக்கிறார்களே என்று கண்ணீர்விட்டு கடிதம் எழுதியிருந்தார்கள். ஆனால் விதிவிலக்காக டைரக்டர் மோகன் என்னுடைய "திண்ணா"சிறுகதையை எடுத்திருந்த விதம் என்னை பிரமிக்க வைத்தது. முக்கிய காரணம் பொருத்தமான பாத்திரத் தேர்வு. டெலிவிஷனுக்கு தனி அடையாளம் தேவைப்படுகிறது. தற்போது மொத்தத்தில் 90 விழுக்காடு சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளாக இருப்பதால் (உங்களுக்கு மிகவும் பிடித்த காட்சி என்ன, சிம்ரன்? உங்களுக்கு எப்ப கல்யாணம், ரம்பா? யாரையாவது லவ் பண்றீங்களா, சினேகா?) இன்னும் இரண்டு வருடத்தில் அலுத்துப் போய்விடும். அதன்பின் அது தனக்கென்று தனி அடையாளத்¢தைத் தேடும். அமெரிக்கா போல பாரபட்சமற்ற "ரேட்டிங்"குகள் வரும். சீரியல்கள் சுவாரசியமில்லையென்றால் பாதியில் மென்னியை முறிப்பார்கள். செய்திகள், விமர்சனங்கள், தொலைக்காட்சிக்கென்றே எடுக்கப்பட்ட சுவாரசியமான டாக்குமெண்ட்ரிகள், அறிவியல் எல்லாம் வந்து அதில் வரும் அறிவிப்பாளர்களும் நடிகர்களும் சினிமாவைவிட பிரபலமாகி சினிமா என்பது மொத்தத்தில் பத்து சதவிகிதத்துக்கு குறைந்துவிடும். DTH என்னும் வீட்டு நேரடி ஒளிபரப்பு சாட்டிலைட்டுகள் கேயு பாண்ட (Ku Band) என்னும் உயர் துடிப்பலையில் வந்ததும் தற்போதைய கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் வழக்கொழிந்து வேறு விதமான கேபிள் டிவி வரும். நேரடியாக நம் வீட்டு சன்னலிலே சின்னதான கிண்ணி வைத்துக் கொண்டு அதில் குறைந்தபட்சம் 60 சானல் பார்க்கலாம். (இப்போதே மலேசியாவின் "வானவில்"இந்த வகை.) என்னதான் ப்ரசார் பாரதி எதிர்த்தாலும் காலத்தின் கட்டாயமாக எஃப்.எம். போல தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் வரத்தான் போகின்றன. அப்போது அத்தனை சானல்களுக்கு 24 மணி நேரம் தீனி போட இதுவரை எடுத்த சினிமாக்கள் அனைத்தையுமே காட்டினாலும் போதாது. இப்போதே அந்த நிலை வந்துகொண்டிருக்கிறது. அதனால் கட்டாயமாக தொலைக்காட்சி தனக்கென்று தனி அடையாளம் தேடித்தான் ஆக வேண்டும். நான் என் சினிமா டைரக்டர் நண்பர்களிடமெல்லாம் டெலிவிஷனை புறக்கணிக்காதீர் எதிர்காலத்தில் இதுதான் முதன்மை பெறப் போகிறது என்று சொல்லி வருகிறேன். இது அடுத்த ஐந்து வருஷத்தில். இன்னும் கொஞ்சம் தள்ளிப்போனால் இன்டர்நெட், சாட்டிலைட் இணைப்புகள் எல்லாம் கலந்து கட்டி டெலிபோன், டெலிவிஷன், சினிமா, கம்ப்யூட்டர், செய்தி எல்லாமே வீட்டில் ஒரே ஒரு ப்ளக் பாயிண்ட்டில் வந்துவிடும். அந்த அளவுக்கு அலை அகலம் ( Bandwidth) வரப் போகிறது. வீட்டைவிட்டு வெளியே போனால் ஒரே ஒரு செல்போன் எடுத்துக் கொண்டு போகலாம். அது உலகம் முழுவதற்கும் பொதுவாக இருக்கும். சிம்கார்டையெல்லாம் மாற்ற வேண்டியதில்லை. தாழ்வாகப் பறக்கும் சாட்டிலைட்டுகள்தான் எதிர்காலத் தொலைபேசி நிலையங்கள். 2010-க்குள் இன்றைய வடிவ டெலிபோன், டெலிவிஷன், சினிமா மூன்றுமே இறந்து போகும். By Writer Sujatha thanks: Ambalam
Viewing all 52 articles
Browse latest View live