Quantcast
Channel: கண்ணம்மா
Viewing all 52 articles
Browse latest View live

குழந்தையின் கனவில்

$
0
0
குழந்தையின் கனவில் வரும் பேய்களையும்
பூச்சாண்டிகளையும் ஓட ஓட விரட்டி விட்டு
குழந்தைக்கு சிரிப்பையும் மூட்டி விட்டு
அடுத்த குழந்தையின் கனவிற்கு விரைகிறார் கடவுள்

கடவுள் சென்றதை அறியாமல்
இன்னும் சிரித்து கொண்டே இருக்கிறது
குழந்தை உறக்கத்தில்

நேயர் விருப்பம்

$
0
0
முன்னாடி மாதிரி டிவி பார்ப்பது கிடையாது இப்போதெல்லாம் கொஞ்ச நேரம் இங்கிலிபிஸ் அப்புறமாட்டி கொஞ்சம் காமெடி வெள்ளி கிழமை நைட் மட்டும் நைட் பதினோரு மணிக்கு மேல அவசரப் படாதீங்க இந்த நேரத்துல தான் சில சானல்களில் அருமையான தமிழ் பாடல்கள் போடுவான் ..மூடுபனி,கடலோர கவிதைகள் ன்னு தமிழ் சினிமாவின் கிளாசிக் பாடல்களை ரசிக்கலாம்.



வீட்டுல அம்மிணி டான்ஸ் புரோகிரமோ மியூசிக் சானல்கள் பார்க்கும் போது போய் ரிமோட்டுக்கு சண்டை போடுவதுண்டு சண்டையில் தோற்று போகும் பட்சத்தில் அந்த மொக்கை நிகழ்ச்சிகளை பார்க்க நேர்வதுண்டு ...அப்படி தான் ஒரு நாள் .ஒரு பெண்ணும் பையனும் வழக்கம் போல டி ஷர்ட் போட்டுக்கிட்டு (பையன் அழகாய் இருந்தான்,பெண் எவ்வளோ முயன்றும் ஐ யாம் சாரி)



அப்போ ஒரு நேயர் போன் பண்ணினார்

இது(காம்பியர்): ஹலோ

அவன்(ரெகுலர் நேயர் நாய்): ஹலோ திருநெல்வேலி மாவட்டம்,அம்பாசமுத்திரம் வட்டம்,சிவந்திபுரம் , 7 வது தெரு, 4 வது வீடு நாகேந்திரன் பேசுறேங்க

இதுக்கு அவுக சிரிக்குக்கிட்டே

இது: வாவ் அருமையான கவிதை
அடி பாவி இது கவிதையாடி..உன்னையெல்லாம்..

அவன் விடாமல்: இன்னைக்கொரு கவிதை சொல்லலாம்னு இருக்கேங்க

இது : சொல்லுங்க ஆவலா காத்திட்டு இருக்கோம்

அவன்: நட்சத்திரம் இல்லாமல் வானம் இல்லை
நம் நட்பு இல்லாமல் நானும் இல்லை நீயும் இல்லை

இது: கண்ணுல தண்ணி வந்துடுச்சுங்க ..நட்பை பத்தி அருமையா ஒரு கவிதை சொன்னீங்க உங்களுக்கு என்ன பாட்டு வேணும் சொல்லுங்க

அவன்: ஏதாவது குத்து பாட்டு சொல்லுவான்

இதுக: என்ன பாட்டு கேட்டாலும் திண்டுக்கல் சாரதியோ இல்லனா காதலில் விழுந்தேனோ போடும்க

இப்படி தான் இருக்கு இப்போ எல்லா டிவி புரோகிராமும் ..ம்ம்

பள்ளிகூட நண்பர்கள்

$
0
0
பள்ளிகூட நண்பர்கள்

தொடக்க பள்ளியில் உங்களுடன் படித்த நண்பர்களை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இன்று வரை யாராவது LKG ல் இருந்து உங்களுடம் படித்து கல்லூரி/வேலையிலும் தொடர்கிறார்களா??


சில சமயம் என் பள்ளி வாழ்க்கையை பற்றி யோசித்து பார்க்கும் போதும் எழும் கேள்விகள் தான் மேலே...


எனக்கும் இன்னமும் நியாபமிருக்கிற சில நண்பர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என தெரிய வில்லை..அவர்களை எங்கேயாது எப்போவாது பார்க்க நேரும் போது பெரும்பாலும் பேச முடிவதில்லை ,சற்றென கடந்து போயிருக்கிறேன், வீட்டிற்கு வந்த போது ஏன் நான் அவன்/அவளோடு பேச வில்லை என எனக்கே என் மேல் கோபமாய் வரும்..


நான் சில பள்ளி நண்பர்களை இன்று மீண்டும் பார்க்க விரும்புகிறேன் , பார்த்தும் இருக்கிறேன்.

ஆம் என் திருமணத்தின் போது பொட்டல்புதூரில் பஸ் திருப்பம் பக்கத்தில் இருக்கும் பலசரக்கு கடையில் வேலைபார்க்கும் தங்கராஜை போய் பார்த்து திருமண பத்திரிக்கையை கொடுத்தேன்.





தங்கராஜ் என்னுடம் 6ஆம் வகுப்பிலிருந்து 10 வகுப்பு வரை படித்தான் , என்னுடனே இருப்பான், என் வீட்டிற்கெல்லாம் வந்திருக்கிறான்.புட்பாலில் எப்போதும் என் டீமில் தான் விளையாடுவான்.உயரம் கொஞ்சம் கம்மியாய் இருப்பதால் அவனை பசங்க எல்லாரும் கிண்டல் பண்ணுவார்கள் ஆனால் அவன் யாரையும் பார்த்து பயந்ததில்லை.அவனை என் மனதில் பதிய செய்த ஒரு நிகழ்ச்சி இது..

"ஒரு முறை SL சார் வகுப்பில் கொய்யாக்கா தின்று கொண்டிருந்தோம் எங்கள் பெஞ்சில் ஆனால் இவன் மட்டும் அவர் கண்ணில் பட்டு விட்டான், அவர் இவனை பார்க்கும் போது சவைத்து கொண்டிருந்தான் , அவ்வளோ தான் அவருக்கு வந்ததே கோபம் , கையால் தான் அவர் எல்லாரையும் அடிப்பார், முதுகில் அடித்தான் 'தொம்' என வகுப்பறையே அலரும்..அவனை வரவைத்து ஓங்கி அடிக்க போனார் திருப்பி நிப்பாட்டி ஆனால் அவன் உருவிக்கொண்டு கீழே படுத்து விட்டான் , எங்களுக்கெல்லாம் சிரிப்பு வந்து விட்டது , மறுபடு SL சார் தன் தொப்பையயும் பொருட்படுத்தாமல் குனிந்த அவனை நிப்பாட்டி அடிக்க போய் அவனும் மறுபடி அதே மாதிரி படுக்க எல்லாரும் கொல்லென்று சிரிக்க ஆரம்பித்தோம் , sL சாருக்கும் சிரிப்பு வந்தது ஆனால் அதே சமயம நம்மை இப்படி படுத்துகிறானே என அவமானாய் இருந்திருக்கும் போல முதுகில் அடிக்க ஆரம்பித்தார் 10 அடிகளில் 4 அடி தான் பட்டிருக்கும் அவர் சோர்ந்து போய் வகுப்பை விட்டு வெளியில் போக சொன்னார் அவனை."

அவன் நான் போய் பைக்கை நிப்பாட்டி அவனை அழைத்த போது டக்கென்று என்னை அடையாளம் கண்டு கொண்டான் ..'ஏலே நல்லாயிருக்கியா' என்றான் எங்களூருக்கு செல்லும் போது மட்டும் எப்படியோ தெரியாது இந்த 'ஏலே' ஒட்டிக்கொள்ளும் ஆனால் அதுக்காக தமிழ் சினிமாவில் வருவது போல 100 வார்த்தைக்கு 110 தபா ஏலே சொல்ல மாட்டோம்..சினிமாவில் வருவதெல்லாம் மிகைபடுத்த பட்ட காட்சிகள்..


அவனது முதலாளி என்னை அவனையும் ஒரு முறை முறைத்தார்,பின்னார் வியாபாரத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்..

'நான் நல்லாயிருக்கேன் ,பஸ்ஸில போவும் போது உன்ன பார்த்தேன்,இங்க தான் வேலை செய்தியா'

'ஆமாம் நீ எங்க இருக்க என்ன வேல பாக்க'

'நான் மெட்ராசில இருக்கேன்,சாப்ட்வேர் கம்பெனில, எனக்கு கல்யாணம் தென்காசில வச்சு வந்துரு' என பத்திரிக்கை நீட்டினேன்.


என் திருமணம் நடந்தது வியாழகிழமை, அவன் வர மாட்டான் என நினைத்தது என் தவறு ..தாலி கட்டு நடந்த கோவிலுக்கும் , மற்ற நிகழ்ச்சிகள் நடந்த மண்டபத்திலும் , இறுதியில் ரிசப்சனிலும் இருந்தான்..

அவனுக்கு அன்றைய சம்பளம் போயிருக்கும், ரிசப்சன் இடைவெளியில் அவனிடம் போய் பேசினேன் என் நண்பர்களை அறிமுகபடுத்தினேன்..திடீரென என் கையை பிடித்து ஒரு கவரை அழுத்தினான் கையில்..டேய் என்னடா என்பதற்குள் ..நான் கிளம்புறேண்டா ஊருல பார்க்கலாம் என கிளம்ப எத்தனித்தான்

'டேய் மேடைக்கு வாடா போட்டோ எடுக்கலாம்'

'இல்லலே இருக்கட்டும் ' என கிளம்பி சென்று விட்டான்..

அன்று இரவு மொய் கவரில் அவன் கவரை எடுத்து பார்த்தேன் 'தங்க ராஜ், கடையம்' என்று அதே கோணல் மானல் எழுத்துக்கள்..உள்ளே 20 ரூபாயும் இருந்தது !!!..

அந்த கவர் இன்னுமும் என் டைரியில் இருக்கிறது..

பள்ளிகூட நண்பர்கள்

$
0
0
சுடலைமாடி-பள்ளிகூட நண்பர்கள்



தங்கராஜ் மட்டுமல்ல இன்னும் ஏராளனமான பள்ளி நண்பர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்தியிருக்கிறார்கள்,வேலைக்கு போயிருக்கிறார்கள்,இறந்து போயிருக்கிறார்கள்

வறுமையின் உச்சம் அவர்களை உலகின் எல்லையை நோக்கி துரத்திக்கொண்டிருந்தது அவர்களும் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்தார்கள்.

1 லிருந்து 5 ஆம் வகுப்பு வரை என்னுடன் படித்தவள் 'சுடலைமாடி' ,துடுக்கானவள். ஆண்களின் சார்பாக எல்லாவற்றுக்கும் நான் முன் நிற்பேன் பெண்கள் சார்பில் இவள்.


பசங்களை அடிக்கவும் தயங்கமாட்டாள், அவளிடன் நானும் அடிவாங்கியிருக்கேன் என்பதை இப்போது நினைத்து பார்க்க சிரிப்பாயிருக்கிறது.படிப்பில் ரொம்ப சுமார்
'சுடலைமாட சுவாமி' என அவளை கிண்டலடிப்போம்,அவள் எங்களை விரட்டுவாள் . அப்போது நாங்கள் மேடை கிளாசில் இருப்போம், மேடையிலிருந்து குதித்து பசங்க பாத்ரூம் பார்க்க ஓடிடுவோம் அவளால் தொடர்ந்து துரத்த முடியாமல் தயங்கி நிற்பாள்...

ஒரு முறை நியாபக திறன் போட்டி நடந்தது ..இந்த போட்டியில் ஒரு மேஜை மீது நிறைய பொருட்கள் வைத்திருப்பார்கள், ஒரு நிமிடம் காண்பித்து விட்டு உடனே ஒரு துணி போட்டு மூடி விடுவார்கள். அதன் பின் அங்கே என்னவெல்லாம் பொருட்கள் இருந்தது என ஒரு பேப்பரில் எழுத சொல்வார்கள்.

சுடலை மாடி தான் முதல் பரிசு வாங்கினாள்..நான் 10 பொருட்கள் வரை எழுதி விட்டு லட்சுமி நரசிம்மனின் பேப்பரை எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தேன்..அவளுடய உடை மிகவும் கசங்கி இருக்கும், பல்கள் எல்லாம் காவி நிறமாயிருக்கும் அவளுக்கு இன்னொரு பெயர் 'சூத்தபல்லி' ...

5 ஆம் வகுப்புக்கு பிறகு நான் சத்திரம் பாரதி மேல்நிலைபள்ளிக்கு போய் விட்டேன் இங்கே 6 முதல் 10 வரை ஆண்கள் , 11 முதல் 12 வரை ஆண்களும் பெண்களும் படிப்பார்கள். பெண்கள் உயர் நிலைபள்ள்ளியில் 6 முதல் 10 வரை இருக்கும்..அதற்கு பின் அவளை பார்க்கும் வாய்ப்புகள் மிக குறைந்து விட்டது..


அவளை நான் மறுபடி வேறொரு சந்தர்பத்தில் சந்தித்தேன்..ஒரு நிமிசம் தான் பார்த்தோம்..இது அவள் தான் நான் உறுதிபடுத்திக்கொள்வதற்க்குள் அவள் கண்ண்லிருந்து மறைந்து விட்டாள்..


11 ஆம் வகுப்பு விடுமுறையில் எல்லாரும் 12 ஆம் வகுப்பு பாடங்களுக்கு டியூசன் போக ,நான் என் மனைவி படிக்கிறாள் என்ற ஒரே காரணத்திற்காக கெமிஸ்ட்ரியும் மாத்ஸும் சேர்ந்தேன்..கெமிஸ்ட்ரி டியூசன் திருமலைபுரத்திலிருந்தது

திருமலைபுரம் எங்கள் ஊரிலிருந்து 4 கீமீ , மாலை 4 முதல் 6 வரை டியூசன் இருக்கும் ,போகும் போது வேனில் போய் விடுவோம் .வரும் போது நடந்தே வருவோம் எல்லாரும்...முதலியார்பட்டி ரயில்வே கேட் அருகில் வழக்கமான நாங்கள் ஆனியன் பக்கோடா வாங்கும் கடையில் எல்லாரும் வாங்கி கொண்டு, நிலக்கடலை, சிகரட்(ஒருத்தன் மட்டும் அடிப்பான்) நடக்க ஆரம்பிப்போம்....

அன்று மாலை 5 மணியிருக்கும் எல்லாரும் அய்யம்பிள்ளையார் குளத்தின் கரையில் நடந்துகொண்டிருந்தோம்...எங்களை ஒரு டிராக்டர் பெரும் இரைச்சலுடன் கடந்து சென்றது..டிராக்டரில் என்னை என் பெயரை சொல்லி அழைத்தது போல் தோன்றவே சட்டென்று திரும்பி பார்த்த போது சுடலை மாடி நின்றுகொண்டே பயணம் செய்துகொண்டிருந்தாள்...

அவளுக்கு எந்த விதமாக நான் அவளை கண்டு கொண்டதை தெரிவிக்க என யோசிக்கவும் கணமில்லா அந்த நிமிடத்தில் அவள் பயணம் செய்த டிராக்டர் வெகுதூரம் போயிருந்தது..சுடலைமாடியே தான் அவள், அந்த காவி பற்கள் ,அதே கலைந்த முடி....

அவளுக்கு இந்நேரம் திருமணமாகியிருக்கும் , பிள்ளைகளும் பிறந்திருக்கும் அவள் குழந்தைகளுக்கு அவளும் சாமியின் பேர் ஏதாவது சூடியிருக்கக்கூடும்...அவளுக்கு இப்போது என்னை நினைவிருக்குமா..எந்த சந்தர்ப்பத்திலாவது என்னை பற்றி யோசித்திருப்பாளா...நான் இங்கே அவளை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொண்ட விஷ்யம் அவளுக்கு தெரிய வருமா???

எண்ணற்ற கேள்விகளுடன் நான்...............

சடங்கு!!!

$
0
0
சடங்கான அன்னிக்கு மாரியக்கா
குச்சிக்குள்ளேயும் மஞ்சத் தண்ணிக்கும்
உட்கார மாட்டேன்னு பெருஞ்சண்டை போட்டா

புதுப்பிள்ளைய காத்துக்கருப்பேதும் அண்டிருக்கும்ன்னு
சொல்லி முட்டை ஓதி பேயோட்ட வந்த
கருப்பனையும் அடிச்சி விரட்டிபுட்டா

பிரவு கலியாணமாகி மெட்ராசு போனவ
அவ மவ சடங்கு கழிக்க ஊருக்கு வந்தா

தெருவ வளைச்சு பந்தல் போட்டு
மவள குத்த உட்கார வச்சு முத தண்ணிய
ஊத்தும் போது மாரியக்கா முவத்துல
எந்த சலனமும் இல்லை
அவ மவளும் அடம்புடிக்கல!!


எங்க ஊர் வழக்கில் ஒரு கவிதை..கவிதைன்னு இதை சொல்லிக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் இந்த மாதிரி விஷயங்களை சொல்ல இந்த வடிவும் தான் ஏதுவாயிருக்கிறது

பிரவு- பிறகு
குச்சி -ஓலைக்குடிசை

நீங்களும் மிஸ் பண்றீங்களா

$
0
0
என்னதான் கிராபிக்ஸ் வந்தாலும் என்ன தான் புதுவகையான கேமரா வந்தாலும் என்ன தான் ரீமிக்ஸ் பாடல் வந்தாலும் என்ன தான் (அட நிறுத்துப்பா)

பழைய தமிழ் படங்களில் வழக்காமாயிருக்கும் ஆனால் இப்போ மிஸ் பண்ணுகிற சில விஷயங்கள் பற்றி பேசலாம்

நோ நோ ஓட்ட போவதில்லை பாராட்டா போகிறோம்

அழகான ஆலமரத்தடி பஞ்சாயத்து கிராமத்தின் பழக்க வழக்கங்களை போகிற போக்கில் சொல்லுவது உதாரணம் சின்ன கவுண்டரில் வரும் அந்த இலைக்கடியில் தாலி சீன் அது என்னப்பா ஊர்ச்சோறா??

பெரும்பாலான இளையாராஜாவின் அழகான பாடல்கள் குத்து பாட்டாயிருந்தாலும் கெத்தாயிருக்கும்

அப்புறம் அந்த செவன்த் மைல் சிக்ஸ்த் மைலில் போய் பாடும் லாலாலக்கள் படத்தோட சேர்ந்து வரும் காமெடி

பாடல்கள் எல்லாம் ஒரே மாதிர் முதல் நாலும் வரி பாடி விட்டு அப்புறம் வரும் மியூசிக்

சண்டை காட்சிகளில் வரும் 'அவுஜிவா' , 'டியுஷும்'

ரெண்டு துணை நடிகர்களை உடம்பு புல்லா ஆயில் தடவி விட்டு அந்த துணை நடிகன் துணை நடிகையை தடவுவதை பார்த்து ஹீரோவும் ஹீரோயினும் தடவி கொள்வது சாரி காதல் கொள்வது

அப்பாலிக்கா ரோஜாவுக்கு பின்னாடி கசமுசா செய்வது(நடிகை ரோஜா இல்ல!!!) சைக்கிளில் பின்னாடியே போய் பாடும் பாடல்கள்
ஹீரோக்கு நாயோ குதிரையோ துணையிருத்தல்

கடைசியில் போலீஸ் வருவது ஹீரோயின் தவற விட்ட தாவணி கரெக்ட்டா ஹீரோ தலையில் விழுவது மலையில் இருந்து 1 23 சொல்லி குதிப்பது ஆற்றில் பாவாடை கட்டி குளிப்பது.....உங்களுக்கு தோனுறது சொல்லுங்கப்பு

இப்படி நிறைய

பெரும்தலைகள் -மணி ரத்னம்,பாலச்சந்தர் , பாரதிராஜா

$
0
0
ரொம்ப நாளாய் எழுத நினைத்த ஒரு போஸ்ட்..தமிழ்சினிமாவில் பெரும் இயக்குநர்களான மணி ரத்னம்,பாலச்சந்தர் , பாரதிராஜா பற்றி விலாவரியாக ஒரு போஸ்ட் போடனும் என்ற ஆசை எனக்குண்டு..

இப்போது கூட இந்த போஸ்டை தொடர நினைப்பவர்கள் தொடர்லாம்

இப்போது ஒரு சுருக்கமாக நான் சொல்ல நினைப்பது..

இந்த மூவரும் ஒரு காலத்தில் பட்டைய கிளப்பினவர்கள் ..மூவரும் தமிழ் சினிமாவை வேறு தளத்துக்கு(மூணவாது புளோர்!!!)எடுத்துச் சென்றவர்கள்..


ஸ்டோடியாவில் டிராமா பாணியில் பவுடர் பூசிக்கொண்டு வில்லனுடன் டிஷியும் போட்டுக்கொண்டிருந்த ஹீரோவை டவுசர் போட விட்டு சகதியில் ஆட விட்டு..வெத்தலை போட விட்டு ..புல் ஹேன்ட் சட்டை போட்டு இடப்பை கூட காடாம அதுக்கும் துணி போட்டு மறைத்து நடித்துக்கொண்டிருந்த நடிகைகளை ஜாக்கெட் போடாமால் , கிராமத்து பாஷை பேச வைத்து மேக்கபில்லாமல் நடிக்க வைத்து வேற்றி அடையவும் செய்தது பாரதிராஜாவின் தனி திறமை..

இவருக்கு முன்னர் ஸ்ரீதருக்கு பின்னர்கலக்கியவர் பாலச்சந்தர்
பாலச்சந்தர் படங்கள் பெரும்பாலும் மனித உறவுகள் மற்றும் அவர்களுக்கு இடையேயான பிணக்குகள் பற்றியது ..அப்பாவும் மகனும் ஒரே பெண்ணை காதலிப்பது..அண்ணனும் தம்பியும் ஒரே பெண்ணை என திணிக்கப்பட்ட உறவுகளை பற்றிய கதைகள் ..ஆனால் அவையனைத்துமே வித்தியாசாமனவையும் கூட..இவரின் படத்தில் வரும் சில கேரக்டர்கள் அவ்வளவு சிறப்பாய் செதுக்கப்பட்டிருக்கும்

மணி இவர்களிரண்டு பேரிலிருந்தும் மிக வித்தியாசனமனவர் காலஓட்டத்துக்கு ஏற்ப தன்னை மாத்திக்கொண்டவர் டெக்னாலஜியையும் தற்கால நிகழ்வுகளையும் உள்வாங்கி படமெடுக்கக்கூடியவர்..



ஆனால் ஒரு கட்டுத்துக்கு மேல் பாரதிராஜா,பாலச்சந்தரால் வெற்றியை தொடரமுடிய வில்லை அதுக்கு காரணம் மணியின் வெற்றிக்கு காரணமான விஷயங்களே..


இடையில் பாரதிராஜா என்னால் கிராமத்து படம் மட்டுமில்லை வித்தியாசமான சிட்டி படங்களும் எடுக்க முடியும் என் நிரூபித்தார் ஆனால் அந்த படங்களில் மிதமிஞ்சிய கவர்ச்சி இருக்கும்

இது தவிர தன் மகனை வைத்து பாசத்தால் எடுத்த ஒரு படம் செம அடி வாங்கியது ..அது வரை எல்லா படங்களிலும் இவர் பின்பற்றிய யதார்த்தம் இந்த படத்தில் துளியளவும் இல்லாததும் ஒரு காரணம்..இப்போதும் கூட பொம்மலாட்டம், கண்களால் கைது செய் என வித்தியாசாமான கரு கொண்ட படங்களை எடுக்கத்தான் செய்கிறார் ஆனால் அவை மக்களை சென்றடைவத்தில்லை ஏனோ

பாலச்சந்தர் கடைசியாக பொய் என ஒரு படம் எடுத்து செமத்தியாக கட்டிக்கொண்டார்..என திருமணத்திற்கு பின் நான் முதன் முதலில் என் மனைவியுடன் பார்த்த படமும் அதுவே

மணியும் அவரது படங்களை பல இடங்களில் காப்பியடிப்பது சலிப்படைய செய்கிறது..உதாரணமாக அனில் கபூர் நடித்து கன்னத்தில் வெளியான இவரது முதல் படத்தில் வரும் டய்லாக்ஸ் மறுபடியும் அலைபாயுதேயிலும் ..மொளன ராகத்திலும் பயன் படுத்திருப்பாரு யாரவாது கவனித்திருக்கிறீர்களா

இப்போது சங்கர் புரடக்சன் படமொன்றில் பாரதிராஜாவும் , பாலசந்தரும் நடிக்கபோவதை கேள்விப்பட்டிருப்பீர்கள்

இப்போ கேள்வி டைம்..

பாரதிராஜாவும் பாலச்சந்தரும் ஏற்கெனவே சில படங்களில் தலைக்காட்டியிருக்கிறார்கள் அந்த படங்கள் தெரிந்தால் சொல்லுங்கள்


பின் குறிப்பு:

இப்போது சங்கர் புரடக்சன் படமொன்றில் பாரதிராஜாவும் , பாலசந்தரும் நடிக்கபோவதை கேள்விப்பட்டிருப்பீர்கள்

பின்மதிய வேளையில்

$
0
0
1
பாம்புகள் பிண்ணி பிணைந்துக் கொண்டிருந்த
அந்த பின்மதிய வேளையில் தான் ஜெயாக்காவுக்கு வலிகண்டது

பிறவி ஊமையான அவளின் ஓலம்
அமானுஷ்யம் கலந்ததாயிருந்தது


குழந்தை வெளிவந்து நஞ்சு சிக்கி
ஜெயக்கா இறந்து போது
பெருங்குரலெடுத்து அழுத பூத்தாயிக்கிழவியின் அலறலில்
பாம்புகள் விருட்டென பிரிந்து புதருக்குள் புகுந்தன




2

அவன் அசிங்கத்தை மிதித்து விட்டான்
யாரும் கவனிக்க வில்லை என்று உறுதிப்படுத்திய பின்
காலை உதற ஆரம்பித்தான்

நேயர் விருப்பம்

$
0
0
முன்னாடி மாதிரி டிவி பார்ப்பது கிடையாது இப்போதெல்லாம் கொஞ்ச நேரம் இங்கிலிபிஸ் அப்புறமாட்டி கொஞ்சம் காமெடி வெள்ளி கிழமை நைட் மட்டும் நைட் பதினோரு மணிக்கு மேல அவசரப் படாதீங்க இந்த நேரத்துல தான் சில சானல்களில் அருமையான தமிழ் பாடல்கள் போடுவான் ..மூடுபனி,கடலோர கவிதைகள் ன்னு தமிழ் சினிமாவின் கிளாசிக் பாடல்களை ரசிக்கலாம்.



வீட்டுல அம்மிணி டான்ஸ் புரோகிரமோ மியூசிக் சானல்கள் பார்க்கும் போது போய் ரிமோட்டுக்கு சண்டை போடுவதுண்டு சண்டையில் தோற்று போகும் பட்சத்தில் அந்த மொக்கை நிகழ்ச்சிகளை பார்க்க நேர்வதுண்டு ...அப்படி தான் ஒரு நாள் .ஒரு பெண்ணும் பையனும் வழக்கம் போல டி ஷர்ட் போட்டுக்கிட்டு (பையன் அழகாய் இருந்தான்,பெண் எவ்வளோ முயன்றும் ஐ யாம் சாரி)



அப்போ ஒரு நேயர் போன் பண்ணினார்

இது(காம்பியர்): ஹலோ

அவன்(ரெகுலர் நேயர் நாய்): ஹலோ திருநெல்வேலி மாவட்டம்,அம்பாசமுத்திரம் வட்டம்,சிவந்திபுரம் , 7 வது தெரு, 4 வது வீடு நாகேந்திரன் பேசுறேங்க

இதுக்கு அவுக சிரிக்குக்கிட்டே

இது: வாவ் அருமையான கவிதை
அடி பாவி இது கவிதையாடி..உன்னையெல்லாம்..

அவன் விடாமல்: இன்னைக்கொரு கவிதை சொல்லலாம்னு இருக்கேங்க

இது : சொல்லுங்க ஆவலா காத்திட்டு இருக்கோம்

அவன்: நட்சத்திரம் இல்லாமல் வானம் இல்லை
நம் நட்பு இல்லாமல் நானும் இல்லை நீயும் இல்லை

இது: கண்ணுல தண்ணி வந்துடுச்சுங்க ..நட்பை பத்தி அருமையா ஒரு கவிதை சொன்னீங்க உங்களுக்கு என்ன பாட்டு வேணும் சொல்லுங்க

அவன்: ஏதாவது குத்து பாட்டு சொல்லுவான்

இதுக: என்ன பாட்டு கேட்டாலும் திண்டுக்கல் சாரதியோ இல்லனா காதலில் விழுந்தேனோ போடும்க

இப்படி தான் இருக்கு இப்போ எல்லா டிவி புரோகிராமும் ..ம்ம்

சுஜாதா அன்புள்ள சுஜாதா - Repost

$
0
0
பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது ,சுந்தர் ராமன் என்னும் ஒரு நண்பன் தான் சுஜாதாவை அறிமுகப் படுத்தினான்.அப்போது கெமிஸ்ட்ரி புத்தகத்திலும்,பிசிக்ஸ் புத்தகத்திலும் நாங்கள் விகடன்,அல்லது மற்ற கதை புத்தங்களை ஒளித்து வைத்து படிப்போம்.சுந்தர் சுஜாதாவை படிப்பான், நான் அப்போது கத்துக்குட்டி ஆதாலால் ராஜேஸ்குமார் படித்துக் கொண்டிருப்பேன்.

'வசந்த கால குற்றங்கள் ' (இந்த நாவலில் கணேஷ்,வசந்த கிடையாது)தான் நான் முதன் முதலில் படித்த சுஜாதா நாவல் .கோடை விடுமுறையில் ஏனோதானோ என்று தான் அந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்,சுஜாதாவின் சொல்லாடலும்,தமிழை எளிய முறையில் அதே சமயம் வித்தியாசாமாகவும் அவர் பயன்படுத்தியிருந்த விதம் என்னை வெகுவாய் கவர்ந்தது.
முதல் மதிப்பெண் எடுத்தால் வண்டி வண்டியாய் பாத்திரங்களை பரிசாய் கொடுக்கு எங்கள் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்ததற்க்கு , முதன் முறையாக புத்தங்கள் கொடுத்தார்கள், அதில் ஒரு புத்தகம் ' ஏன்?எதற்கு?எப்படி?'. அந்த புத்தகத்தின் மூலம் நான் தெரிந்து கொண்டது பல விஷயங்கள் , உதாரணத்திற்கு , அதில் ஒரு வாசகர் கேட்ட கேள்வி , 'மனிதன் இறக்கும் வரை வளர்ந்து கொண்டே இருக்கும் உறுப்பு எது ' அதற்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.

வசந்த கால குற்றங்களுக்கு பிறகு எனக்கு படிக்க கிடைத்தது 'காந்தளூர் வசந்த குமாரன் கதை' , சரித்திர நாவலாய் இருக்கிறதே போர் அடிக்குமோ என எண்ணி தான் ஆரம்பித்தேன்,ஆனால் வாத்தியார் பிண்ணி எடுத்திருந்தார். அந்த நாவலில் வரும் கணேஷ் பட்டரும்,வசந்த் ஐயரும் தான் கணேஷ்,வசந்த என பிற்காலத்தில் தான் தெரிந்தது.அதற்கு பின் 3 ஆண்டு காலங்கள் கல்லூரியில் சுஜாதாவின் எந்த புத்தகமும் படிக்க கிடைக்க வில்லை.நான்காம் ஆண்டு என் பள்ளி நண்பன் சுந்தரின் பிறந்த நாளுக்காக பரிசாய் கொடுக்க கோவை டவுன் ஹாலில் பழைய புத்தக கடைகளுக்குள் புகுந்து புரட்டிய போது சுஜாதாவின் எந்த புத்தகமும் கிடக்க வில்லை,பொதுவாக அவர் மாத நாவல்கள் எழுதியிராத காரணத்தால் அவர் புத்தங்கள் இந்த மாதிரி பழைய புத்தக கடையில் கிடைக்காது.நம்பிக்கையிழந்த கடைசியாக எதேச்சையாக ஒரு கடையில் பைண்டு பண்ணியிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து பார்த்தேன்..ஆச்சர்யம் எனக்கு கிடைத்தது..'மூன்று நிமிஷா'. மறுபடியும் புத்தகங்களுக்கு தலை விட்ட போது கிடைத்தது "நைலான் கயிறு" சுஜாதாவின் முதல் நாவல்,குமுதமில் வந்தது.அந்த நாவலுக்கு "சீட்டு கட்டு மாளிகை " என்று இன்னொரு பெயரும் உண்டு. அந்த புத்தங்களை படித்து விட்டே அவனுக்கு பரிசளித்தேன்.

கற்றதும் பெற்றதும் ல் அவர் தனக்கு வரும் மெயில்கள் பற்றி எழுத அவருக்கு இமெயில்கள் அனுப்பினால் அவர் பதில் அளிப்பார் என தெரிய அவருகு என் முதல் மெயிலை அனுப்பினேன். விகடனில் அவர் இரண்டு வரிகளில் கதை எழுதி அனுப்ப சொல்லி எழுதியிருந்தார் ,நான் ஒரு சில கதைகள் யோசித்து அவருகு மெயிலினேன் ,அவரிடமிருந்து மறுநாளே ரிப்ளை வந்தது , ஒரே வரியில் 'too late ' என. ஏமாற்றத்திலும் ஒரு சந்தோசம்.

பின்னர் அவர் பிறந்த நாளுக்கு , இணையத்தில் அவரை பற்றிய பலரும் எழுதிய சிறந்த பதிப்புகள், அவர் கதை பற்றிய தீவிர விவாதங்களை தொகுத்து என் பிளாகில் இட்டேன், அதன் லின்க் கொடுத்து ,அவரை வாழ்த்தி மெயிலினேன். மறு நாள் 'தாங்க்ஸ்' என ஒற்றை வரி பதில் , அவர் என் போஸ்ட்டை படித்தாரா எனத் தெரிய வில்லை.

இன்னொரு முறை முட்டாள் தனமாய் ஒரு ஆர்வத்தில் என் கவிதைகளை அவருக்கு அனுப்பினேன், 'இதை போல இனிமேல் அனுப்பாதீர்கள்' என பதில் அனுப்பினார்.


சினிமாவில் அவரை ஒழுங்காக பயன்படுத்தியவர்கள் மணிரத்னமும், சங்கரும் மட்டுமே, இவர்கள் அல்லாது உள்ளம் கேட்குமே,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என சில படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார், இந்த படங்களில் எல்லாம் சுஜாதா தான் டயலாக்ஸ் என டைட்டிலில் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

விகடன் கற்றதும் பெற்றதுமில் அவர் பல நல்ல கவிஞர்களை,இசையமைப்பாளர்களை,பாடகர்களை,எழுத்தாளர்களை இனம் கண்டு பாராட்டி பேசி அவர்கள் முன்னேற காரணமாயிருந்திருக்கிறார்.உதாரணமாக நா.முத்து குமாரின் 'தூர்' கவிதை மற்றும் 'பூனை' என்னும் கவிதைகளை வெகுவாக பாராட்டினார்.கார்டூனிஸ்ட் சிம்பு தேவனை அவரது சொந்த ஊரிலிருந்து அழைத்து சென்னை வரச் சொல்லி ,பல வாய்ப்புகள் கொடுத்து,இப்போது அவர் டைரக்டராக உயர காரண்கர்த்தா கவிஞர் தாமரை அடையாளம் கண்டவரும் இவரே. இவர் ஒரு காலத்தில் புகழ்ந்தவர்கள் எல்லாம் இப்போது நல்ல நிலையில் உள்ளார்கள்.
இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம்('ஏய் நீ ரொம்ப அழகாயிருக்கிற' படத்தில் 5 இசையமைப்பாளர்களில் ஒருவராய் அறிமுகமானார்.) பற்றி அவர் முன்பே எழுதியுள்ளார், 'அழகிய தீயே ' மூலம் நல்ல பயரெடுத்தவ்ர் ரமேஷ் வியாகயம் , அவர் திறமை இன்னும் முழுதும் வெளிப் பட வாய்ப்பு கிடைக்க வில்லை.


இன்போசில் வேலையில் ஜாய்ன் பண்ணி பென்ச்சில் இருந்த மாதங்களில் , கூகுளில் அவரை பற்றியும்,கதைகள், நாவள்கள்,அவர் சம்மந்தபட்ட குழுக்கள்,அவரை பற்றி பதிவு போடுபவர்களிடம் தொடர்பு கொள்வது என ஆரம்பித்தேன்.இப்படித்தான் 'என்.சொக்கன்' அறிமுகமானார்,இவர் சுஜாதாவில் தீவிர வாசகர், விடனில் 'வல்லினம் ,மெல்லினம்,இடையினம்' எழுதினார், இவரிடமும்,கிறுக்கல்.காம் குருவிடமும் நிறைய பேசி , என்னிடம் இருக்கும் நாவல்களை பகிர்ந்தும்,அவர்களிடமிருந்து பெற்றும் இருக்கிறேன்.


to be continued

ஸ்போக்கன் இங்கிலிஷ்

$
0
0
12 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம் டோட்டலுக்காக படிக்கும் ஒரு பாடமாகவே இருந்தது பெரும்பாலும் கிராம பள்ளிகளில் ஆங்கிலத்தை மதிக்கவே மாட்டார்கள் தமிழ் வாத்தியார்க்கு கூட ஆங்கில வாத்தியாரை பிடிக்காதுன்னா பாருங்களேன்


எனக்கு 10 ஆம் வகுப்பு வரை ஆங்கிலத்தின் ஒரு ஈடுபாடு இருந்தது அதற்கு பின் வேற பல விஷயங்களில் ஈடுபாடு வந்தமையால் ஆங்கிலம் கசக்க தொடங்கியது

அதுவும் 11 ஆம் 12 ஆம் வகுப்பில் ஆங்கில எடுத்த வாத்திக்கு ஆங்கிலமே தெரியாது புத்தகத்தில் என்னமோ இருக்கும் இந்தாளும் என்னமோ ஒப்பிப்பாரு அந்த பாட வேளையில் பெரும்பாலும் மசூதின் டிபன் பாக்ஸில் சோற்றுக்கிடையில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் மட்டன் துண்டுகளை லாவகமாக திருடுவதும் முன் பெஞ்சு பையன்னுக்கு டஸ்டரின் கிழிந்த துணியால் வால் கட்டி விடுவதுமே நடக்கும் ..நான் தட்டி தடுக்கி 12 த்தில் 174 எடுத்து விட்டேன் ..

ஆனால் அத்தோட ஆங்கில என்னை விட வில்லை
தமிழில் ஆர்வம் இருந்தமையால் 10 ஆம் வகுப்பில் டிஸ்க்டிக்ட் முதல் வந்தமையால் 12 த்திலும் ஸ்டேட் பர்ஸ் வாங்கனும்டோய் கனா கண்டு மண்ணைக்கவ்வினேன்..

கல்லூரியில் ஆங்கிலம் தான் பேசுவார்கள் ஆங்கிலத்தில் தான் படம் எடுப்பார்கள் ஆங்கிலத்தில் தான் தும்முவார்கள் என கேள்விப்பட்டு ஈரக்கொல நடுங்க ஆரம்பித்தது

ஆனால் பயந்தது போல அவ்வளவாய் ஆங்கிலம் யாரும் பேச வில்லை பெரும்பாலும் எல்லாம் பட்லர் ஆங்கிலம் தான் பேசினார்கள் ஒரு மேடமை தவிர

அது 'சி' எடுத்தது (அழகாக இருக்கும் கண்ணை உருட்டி உருட்டி பார்க்கும்)அந்த மேடமை எனக்கு மிகப் பிடித்திருந்தது ஆனால் அதுக்கு என்னை ஏனோ பிடிக்க வில்லை ..அடிக்கடி ஆங்கிலத்தில்கேள்வி கேட்டு நிப்பாட்டி விடும்

நான் என் நியாபக பரணில் இருந்து அதற்கான பதிலை எடுத்து வருவதற்குள் அது என்னை நக்கலடித்து விட்டு அடுத்தவனை கேட்க ஆரம்பித்து விடும் ..அவமானமும் வேதனையும் பிய்த்து பிடுங்க அப்போ பேமஸான பிசினஸான ஸ்போக்கன் இங்கிலிஷில் சேரலாமென முடிவெடுத்தேன்

காந்திபுரத்துக்கு தான் போயாகனும் விவேகானந்தா மாதிரி இடங்களுக்கு போனால் எங்கே டிவியில் காமித்து பல பெண்கள் லவ் பண்ண ஆரம்பித்தி விடுவார்களோ என பயந்தோ என்னவோ சேக்ஸ்பியர் னு ஒரு இடத்தில் சேர்ந்தேன்.

ராஜ ராஜேஸ்வரி டவரில் பீடாக்கரை படிகளில் ஏறி இரண்டாவது மாடிக்கு போனால் ஒரு பிரவுசிங் செண்டர் வரும் அங்கே பிரவுசிங்கை தவிர மற்ற எல்லாம் பண்நுவார்கள் நமக்கு அது வேணாம் இன்னும் கொஞ்சம் ஏறி மூணாவது மாடிக்கு போங்க இடது பக்கம் ஒரு டேபில் அதுக்கு முன்னாடி ஒரு தடியன் வாயில் பாக்கோடு அதுக்கு அடுத்த பெரிய ஸ்க்ரீன் அதை திறந்து பார்த்தால் ஒரு ஆண்ட்டி போர்டில் கிறுக்கிட்டு இருந்தது அது தான் மேடம் அப்போ வாயில பாக்கோட அவரு சாராம்

ஸ்நேகா படம் போட்ட ஒரு நோட்டு போக வர 20ரூபா தம் எக் பப்ஸ் டி சாப்பிட 20 ரூபா டெய்லி கிளம்பிடுவேன் கோவைப்புதூரிலிருந்து 3 டியில்.

அந்த மேடம் பார்க்கும் போது நல்லவே தெரிந்தது ஹிந்தி வாலான்னு பெரிய சுரிதார் கையில் மெகந்தி முகத்தில் வியர்வை சால் போட்டிருக்காது ஒரு வேளை அதை தான் முன்னாடி ஸ்கீரீனா போட்டிருகாங்களோன்னு எனக்கு ரொம்ப நாள் டபுட்.

ஒளிமயமான எதிர்காலம் இருக்குடா உனக்கு நீ மட்டும் இங்கிலிஷ் கத்துக்கிட்டேன்னா மாத்யூஸிடம் ஓட்ட மலையாளத்தில் பேசுவதை விட்டு ஸ்டையாய் பேசலாம் என கலர் கனவுகள் பலவுடன் போக ஆரம்பித்தேன் கிளாசுக்கு..ஆனால் அங்கேயும் ராமா கில்டு பை ராவணா என ஆக்டிவ் வாய்ஸ் பேசிவாய்சினார்கள் செம டென்சன் ஆச்சு இதெல்லம் 7 ஆம் வகுப்பிலே முடிச்சாச்சுன்னு ரெண்டு நாள் கிளாசுக்கு மட்டம் போட்டேன்

ஆனால் அந்த பாக்கு வாயன் 300 ரூபாய் வாங்கிட்டானேன்னு ம்றுபடியும் போனேன் இப்போ சிம்பில் காம்பவுன்ட் க்கு வந்திருந்தார்கள்
சார்(மிஸ்டர்.பாக்கு) ஒவ்வொரு நாளும் பீஸ் கொடுத்திடியான்னு கேட்பான் அவனுக்கு பதில் சொல்ல எரிச்சலா இருக்கும்

வகுப்பு போரடிக்கையில் மெதுவா பக்கத்திலிருந்து குஜிலிகளிடம் பேசியதில் ஒரு பெண் காருண்யா இன்னொன்னு அமிர்தான்னு தெரிய வர பரவாயில்ல உனக்கு கம்பெனி இருக்குன்னு தேத்திக்கிட்டேன்

என்னைய இந்த கிளாசுக்கு சேர்த்து விட்ட என் கிளாஸ் பையன் பின்னர் வகுப்புக்கு வருவதை நிறுத்தி விட்டதால் பாக்கு என்னிடம் அவனை பற்றி நோண்ட ஆரம்பித்தான் அவனிடம் பீஸ் வாங்கி தருமாறு சொன்னான்

இதுக்கிடையில் பாடம் சூடுபிடிக்க நான் ஸ்போக்கன் இங்கிலிஷில் ஏ பி சி டி படிக்க ஆரம்பித்திருந்தேன்..மேடமும் சளைக்காமல் சகித்து என் மொக்கை டபுட்டுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருந்தது அடுத்த மாதம் பீஸ் தரும் நாள் வந்தது

எப்போது வாசலில் இருக்கும் சாரை காணலை மேடம் வகுப்பின் இடயில் டக்குன்னு என் பக்கம் வந்து கார்த்தி பீஸ் கொண்டு வந்திருக்கியான்னு கேட்டு வாங்கி அவசரமா சுடிதாரில் மறைத்துக்கொண்டது

இன்னொரு நாள் மேடம் மூஞ்சியெல்லாம் வீங்கி ரோஸ் பவுடர் போட்டிருந்தது

கொஞ்ச நாட்கள் போக நானும் ஏதோ கத்துக்கொண்டிருந்தது போல தோன ஆரம்பித்த அந்த சுபமங்கள நன் நாளில்
வழக்கம் போல வகுப்புக்கு போயிருந்தேன் பார்த்தால் வகுப்பு சட்டர் போட்டு மூடியிருந்தது சாலையும் சாரையும் கானோம்

பக்கத்திலிருந்த மிக்ஸ் ரிப்பேர் கடையில் விசாரித்தால் மேடமுக்கு சாருக்கும் ரிப்பேரானது தெரிய வந்தது இனிமே திறக்க மாட்டார்ககள் எனவும் வாடகை பாக்கி எனவும் தெரிய வந்தது

அப்புறமாய் மாத்யூஸை மலையாளம் நன்றாக படிக்கும் எம் சி ஏ பையன் கரக்ட் பண்ணிட்டான்(ஸ்போக்கன் மலையாளம் போயிருக்கலாமோ??)

நானும் பட்டு பட்டு ஆங்கிலம் பேச கற்றுக்கொண்டேன்(ஆனால் அதை எங்கேயும் யூஸ் பண்ணுவதில்லை என்பதை இங்கே தேவையில்லாத விஷயம்)

ஆங் அப்புறம் அந்த ஸ்நேகா நோட்டை இன்னும் பத்திரமாய் வைத்திருக்கிறேன்

எனக்கு இன்று தான் தலைப்பிரசவம்---வைரமுத்து

$
0
0
ஒரு நாள் தனது மனைவியை மருத்துவமனையில் சேர்த்து விட்டு விடுமுறை போடுவதற்காக அலுவலகம் போனார் வைரமுத்து. அங்கு "மனோஜ் கிரியேஷன்ஸ் - பாரதிராஜா படத்திற்கு பாட்டெழுத அட்லாண்டிக் ஓட்டல் , அறை எண் 410க்கு வரவும் " என்ற குறிப்புச் சீட்டு , இவர் மேஜை மீது இவரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது.

மருத்துவமனையின் நிலைமையைத் தொலைபேசி மூலம் தெரிந்து கொண்டு 'அட்லாண்டிக்கில்' கலக்க இந்த ஓடை , கங்கையின் வேகத்தில் பிரவகித்தது.

அறையில் , இளையராஜா இருந்தார். கங்கை அமரன் இவரை அறிமுகம் செய்து வைத்தார். இருவரும் புன்னகை விளக்கம் செய்து கொள்கின்றனர்.

பாரதிராஜா வந்தார் ." ஓர் இளைஞன் ; இயற்கையின் நேசன்; கலைகளின் காதலன்; கனாக்களில் வாழ்பவன்; சமூகப் பிரக்ஞையும் உடையவன். ஓர் அந்திப் பொழுதில் இயற்கையை நேசித்தும் தன் சுய விலாசம் சொல்லியும், பாட்டொன்று பாடுகிறான் . இது தான் படத்தில் பாட்டு வருகிற சுழல்," என்றார்.

இளையராஜாவின் ஆர்மோனியம் ஒரு ராஜராகம் பாட ஆயத்தமானது. "தானானே தன்னா தனனன தானானே தனனா". முதல்முறை அவர் வாசித்துக் காட்டிய போதே அந்த மெட்டுக்குள்ளிருக்கும் சுகலயத்தில் இவர் சொக்கிப் போனார். இரண்டாம் முறையும் மூன்றாம் முறையும் பாடிக்காட்டச் சொன்னார். இவரே , பின் பாடிக்கொண்டே எழுத ஆரம்பித்தார்.

"பொன் மாலைப் பொழுது இது ஒரு
பொன் மாலைப்பொழுது
வான்மகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்"

என்று எழுதி விட்டு சரிபார்க்குமாறு கொடுத்தார். இளையராஜா மனதுக்குள்ளேயே பாடிப்பார்த்து புருவங்களை உயர்த்தி, தலையாட்டி , தன் இசைக் குழுவினரைப் பாற்த்து சமிக்ஞை செய்த போது இவரது ஆனந்த வெள்ளம் கரைகடந்தது. பாரதிராஜா கீழே சென்று மேலே வருவதற்குள் சரணங்களை எழுதி முடித்து விட்டார்.

"பூ மரங்கள் சாமரங்கள் வீசாதோ"
"வானம் எனக்கொரு போதி மரம்"

என்ற இடங்களில் மனந்திறந்துபாராட்டினார் பாரதிராஜா. இளையராஜா தனது உதவியாளாரிடம் " வைரமுத்துவின் முகவரியை வாங்கி வைத்துக் கொள்ளப்பா" என்றார். அவர் போனபின் பாரதிராஜா," இவன் இதுவரைக்கும் எந்த முகவரியையும் வாங்கிவைத்துக்கொள்ளச் சொல்லவில்லை. இன்று முதல் உங்களுக்கு ஒரு புதிய எதிர்காலம் " என்று அன்போடு அணைத்துக் கொண்டார்.

மருத்துவமனைக்கு வந்த போது இவருக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிறது . மனைவியார் தாமதம் பற்றி விசாரிக்கிறார். இவரோ , எனக்கு இன்று தான் தலைப்பிரசவம் " என்கிறார். அவர் மனைவிக்கு புரியவில்லை." பாரதிராஜா படத்துக்குப் பாட்டெழுதிவிட்டு வருகிறேன்! பல்லவி உன் பெயரோடு ஆரம்பிக்கிறது " எனக்கூறி சிரித்தார்.

வைரமுத்து ஒரு சினிமாக்கவிஞராக , அவர் மகன் கார்க்கியைப் போலவே அன்றுதான் பிறந்தார்.

வைரமுத்து முதல் பாடல் எழுதிய ஆண்டு 1980 . படம் 'நிழல்கள் '. இவரது பாடல் பதிவான முதல் பாடல் 'சூலம்'. இவர் எழுதி வெளிவந்த முதல் பாடல் இடம்பெற்ற படம் 'காளி'

சங்கத்தில் பாடாத

$
0
0
இந்த பாடலை நீங்கள் கண்டிப்பாக கேட்டிருப்பீர்கள்..எனக்கும் மிகப்படித்த பாடல் அந்த ஹீரோயின் முகத்தை குளோசப்பில் காட்டும் காட்சியில் மட்டும் கண்மூடிக்கொள்வேன்..


எனக்கு இணையத்தில் மிக பிடித்த விஷயம் ஒரு பாடல் அல்லது கதையின் உருவாக்கத்திற்கு பிண்ணனியில் என்ன நடந்தத்து என்பதை தேடிப்படிப்பது /காணக்கிடைப்பது

அப்படி இந்த பாடல் பற்றிய தேடிய போது இது கிடைத்தது ..நீங்களும் ரசிப்பீர்கள் என இங்கே தருகிறேன்



“சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையொடு என்
முன்னே யார் வந்தது”

ஆட்டோ ராஜா என்ற கேப்டனின் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலின் பின்னால் ஏகப்பட்ட குழப்பங்கள் உண்டு. இந்தப் பாட்டு முதலில் மலையாளத்தில் வந்தது என்றும், இந்த மெட்டுக்கு சொந்தக்காரர் சங்கர்- கணேஷ் என்றும் பல கட்டுக்கதைகள் இணையத்தில் உலவுகிறது.

இந்த மெட்டு முதலில் மூன்றாம் பிறை பிண்ணனி இசையில் ராஜா உபயோகித்தது. இதை மிகவும் ரசித்த பாலு மகேந்திரா ஓலங்கள் என்ற மலையாள படத்தில் ராஜாவை பாடலாக்க சொன்னார். தும்பி வா என எஸ்.ஜானகி தனியாக பாடிய பாடலது. அதேப் பாடலை பின் தமிழில் டூயட்டாக மாற்றினார் ராஜா. தும்பி வா பாடலின் ஸ்ருதியும் இதுவும் வேறு வேறு. இதை ராஜா தொடங்கும் போதே ஒரு காதல் ஏக்கத்தை காண்பித்திருப்பார். ஆனால் மலையாளத்தில் அப்படி இருக்காது.

அதேப் போல இந்தப் பாடலை எழுதியது புலமைப்பித்தன் என்றும், கங்கை அமரன் என்றும் சொல்கிறார்கள். எனக்கும் சரியான தகவல் கிடைக்கவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். பாடலின் வரிகளை கவனித்தால் இதன் முக்கியத்துவம் விளங்கும். எனக்கு மிகவும் பிடித்த வரி. (பின்னூட்டத்தில் இதை எழுதியவர் வைரமுத்து என்கிறார் அப்துல்லா.)

”அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை”

ஒவ்வொரு வரியும் இலக்கிய ரசம் சொட்டும். புலமைப்பித்தனாகத்தான் இருக்க முடியும் என்று நான் நினைத்தாலும், கங்கை அமரனும் இதை எழுதும் திறன் கொண்டவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இந்தப் பாட்டு பின் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளுக்கும் சென்று வென்றது. ஹிந்தியில் மட்டும் ராஜா இசை இல்லையென நினைக்கிறேன். சமீபத்தில் கூட சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் ஸ்ரேயா தோன்ற இதன் இசை ரீமிக்ஸ் செய்யப்பட்டு அமர்க்களமாக வந்தது. நான் கூட ஒரு பதிவில் இது என்னப் பாட்டு என்று கேட்டிருந்தேன். யாரும் சொல்லவில்லை. யூட்யூபில் தேடினேன். கிடைக்கவில்லை. ஒரு நாள் ஹலோ எஃப்.எம்முக்கு அழைத்து, ”ஹலோ... எஃப்ம்மா” என்று இந்தப் பாடலைக் கேட்டால் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.அது எஃப்.எம் தானாம். அந்தப் பாடலை இல்லையென்று சொல்லிவிட்டார்கள். எப்படியாவது இந்தப் பாடலையும் எஃப்.எம்மில் ஹிட்டாக்க வெண்டும் என்பதே என் அடுத்த ஆசை.

ராஜா ஒரு live concertல் இந்தப் பாடலை பாடியதைக் கேட்டால் ஏதோ ஒரு நிறைவான தருனத்தை கடந்தது போல் இருக்கும். அதுவும் அந்த வயலின்... வாவ்!!!.. இந்த வீடியோவில் 47வது செகண்டில் ஆரம்பிக்கும் வயலின் பிட்டை கேளுங்கள். அரங்கம் ஆர்ப்பரிக்க தொடங்கும். இதை ரிங்டோனாக மாற்றி வைத்துக் கொண்டால் உங்கள் ஆயுள் சில நாட்கள் நீடிக்கக்கூடும்.


பாடல் வரிகள்:

சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையொடு என்
முன்னே யார் வந்தது
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது


கையென்றே செங்காந்த மலரே
நீ சொன்னால் நான் நம்பவோ
கால் என்றே செவ்வாழை இலைகளை
நீ சொன்னால் நான் நம்பி விடவோ
மை கொஞ்சம்.......
பொய் கொஞ்சம்........
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்திலே....


அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா..அ...
கொஞ்சம் தா..ஆ..
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்திலே


ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டு...ஆ
மெய் தொட்டு..ஆ
சாமத்திலே தூங்காத விழிகளில்
சந்தித்தேன் என்னென்ன மயக்கம்


தமிழ் சங்கத்திலே பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது

Source :http://www.karkibava.com/2009/08/blog-post_11.html

மின்சார ரயில் அனுபவங்கள்...

$
0
0
--------------------------------------------------------------------------------

மாதம் ஒரு முறையாவது ரயிலில் பயணிக்க வேண்டும் என்பது என் New Month resolution..(நமக்கு ஒவ்வொரு நாளும் புது நாள் தான்..)..எனக்கு கிடைக்கும் அனுபவங்களுக்காகவே பயணிப்பவன் நான்..இதில் சுயநலம் கலந்திருக்கிறது என்று சொன்னால் 'இல்லை' என்று சொல்ல முடியாது என்னால்!!..

அனுபவம் 1:


இரண்டு வாரங்களுக்கு முன்பு மாலை நேரம் 5 மணியளவில்(செங்கல்பட்டு டூ தாம்பரம்) ரயிலில் பயணிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.. கையில் ஐபாட் இல்லாமல் காதில் ஒயர்கள் இல்லாமல் கையில் பெயர் தெரியா எழுத்தாளரின் புத்தகமில்லாமல் நான் பயணிப்பது மற்றவர்களிடமிருந்து என்னை முற்றிலும் வேறுபடுத்தி காட்டியது

என் முன்னே இரண்டு கல்லூரி மாணவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.அதில் ஒருவன் தன்னை ரவுடி போல காட்ட மிக பிராயத்தனப்பட்டிருந்தான்..அவனது உடை, பாவனை, நடவடிக்கை எல்லாம் அப்படி இருந்தது..அருகில் இருந்தவன் அவன் நண்பன் தான் போலும் ஆனாலும் கொஞ்சம் அடிமை தனமாய் அவன் விடும் உதாருக்கு தலையாட்டிக்கொண்டும் சிரித்து கொண்டும் இருந்தான்..


அவர்கள் மடியில் ஒரு புத்தகமிருந்தது,சட்டம் சம்மந்தமான புத்தகம், தமிழில் இருந்தது..இந்த மாதிரி ஆங்கில தமிழ் மொழி பெயர்ப்பு புத்தகங்களை எழுதுவதற்கு தமிழ் பற்றியும் ஆங்கில பற்றியும் சீரிய அறிவு வேண்டும்..என் கல்லூரி நண்பர்கள் விசி ++ ஐ தமிழில் படித்தார்கள் , அந்த புத்தகம் 80 ரூ மட்டுமே..என்னால் 2 வரிகளுக்கு மேல் வாசிக்க இயல வில்லை அந்த அளவு கொடுமை...இடையில் மருத்துவ படிப்பை யாரோ தமிழில் கொண்டு வர வேண்டும் என்றார்கள் அட போங்கடா நீங்களும் உங்க சட்டமும்...

கதைக்கு வருகிறேன்..அவர்கள் செங்கல்பட்டு பக்கத்தில் ஏதாவதொரு கல்லூரியில் படிப்பவர்களாயிருக்க கூடும்,நான் ஜன்னல் வழியே வேடிக்க பார்த்தாலும் அவர்களின் சம்பாஷனையை கேட்பதை தவிர்க்க முடிய வில்லை..
ரவுடி ..அடிமையிடம் எங்கள் கம்பார்ட்மென்டில் ஒரு இருக்கையை கைக்காட்டி ஏதோ சைகை செய்தான்..என் காதுகளை கூர்மையாக்கி கொண்டே.

அடிமை அங்கே சென்று ஒரு பையனை கைப்பிடித்து இழுத்து வந்தான், இழுத்து வரப்பட்ட பையன் துளிர் மீசையுடன்,முகத்தில் முகப்பருக்களுடன் இருந்தான்..ஆனாலும் அவனிடம் ஏதோ வசீகரித்தது..அந்த கிருதாவா அல்லது சர்ட் இன் பண்ணி சுருள் முடியை நேர்த்தியாய் வாரியிருந்ததா என தெரிய வில்லை.. நான் எதேச்சையாக திரும்பியது போல நடித்ததில் இதெல்லாம் பார்க்க முடிந்தது..

அடிமையை இன்னொரு சீட்டில் உட்கார சொல்லி விட்டு,இவன் அந்த பையனை அருகில் உட்கார வைத்தான், உட்கார வைத்தான் என சொல்வதை விட அழுத்தினான் என சொல்லலாம், அவன் இடுப்பின் பின்புறம் கைவிட்டு அவன் எழும்ப முடியாத படி பிடித்துக் கொண்டான்.அந்த பையன் நெளிந்து கொண்டிருந்தான்.

ரவுடி அந்த பையன் இதற்கு முன்னால் இருந்த் இருக்கையை கைகாட்டி ஏதோ நக்கலாய் கேட்டான், சில அருவருக்கத்தக்க கவுதம் மேனன் டைப் டயாலாக்குகள் என் காதில் கேட்டன , அதற்கு அந்த பையன் ஒரு சிரிப்பை பதிலாக கொடுத்து தொடர்ந்து நெளிந்து கொண்டிருந்தான்.

இதற்கு அடிமை எழுந்து வந்து இவன் மேல் கைப்போட்டு..'இப்போவே ஆரம்பிச்சிட்டியாடா? என்னடா பண்ணின அவள?' என்றான் நமுட்டு சிர்ப்போடு,பதிலுக்கு பையன் இப்பவும் சிரித்தான். ரவுடி அடிமையிடம் இவனை ஒப்படைத்து விட்டு மெதுவாய் எழுந்து அந்த பையன் இதற்கு முன்னால் அமர்ந்த இடத்திற்கு சென்றான்.

நான் ஆர்வ மிகுதியில் உடம்பை வளைத்து கொட்டாவி விடுவது போல என்ன நடக்கிறதென பார்த்தேன்...அந்த பையன் இருந்த இருக்கையில் அருகே இன்னொரு பெண் உட்கார்ந்திருந்தாள், ரவுடி அவள் அருகில் சென்று நெருங்கி உட்கார்ந்தான்..அவள் கூச்ச பட்டாள் சிரித்தாள் அவள் உடம்பு அதிர்ந்து கொண்டிருக்க கூடும்.முகத்தில் அதை காட்டாமல் கட்டுப்படுத்த முடிய வில்லை அவளால்.

இங்கே அடிமை தொடர்ந்து அந்த பையனை கேள்விகளால் நச்சரித்தான், "என்னடா சொல்றா அவா?, எப்படிடா புடிச்ச" என்று திரும்பி திரும்பி கேட்டுக்கொண்டிருந்தான்..ரவுடி அந்த பெண்ணின் புத்தகம் ஒன்றை வாங்கி திருப்பி பார்த்து ஏதோ பேசிக்கொண்டிருந்தான், அவள் தயங்கி தயங்கி பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்..


அடிமை பையன் ரவுடி செய்ததை போலவே இவனை இடுப்பை வளைத்து பிடித்து எங்கும் நகரமுடியாமல் செய்திருந்தான், ரவுடி இப்போது அந்த பெண்ணின் பர்சை வாங்கி பார்த்து அதில் ஏதோ தேடிக்கொண்டிருந்தான். அடிமையின் பிடியில் இருந்து இவன் நழுவி எந்திரிக்க பார்த்தான். என் அருகில் இருந்த 'நக்கீரனில் 10 வயது சிறுமி பல முறை பலாத்காரம்' படித்துக்கொண்டிருந்தவரும் இதை கவனித்திருக்க வேண்டும், அவர் புத்தகம் படிப்பது போல இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தாரோ என்னவோ..

கொஞ்ச நேரத்தில் ரவுடி இங்கே வந்து இவனிடன் ஏதோ பேசி பையனை அனுப்பி விட்டான். அந்த பையனும் எழுந்து சர்ட் இன்னை சரியாக செய்து , ஒரு சீப்பை பின் பாக்கெட்டில் இருந்து எடுத்து சீவிக்கொண்டே அந்த பெண்ணின் அருகில் அமர்ந்தான்..கொஞ்ச நேர அவர்கள் ஏதும் பேச வில்லை..

அதற்கு தாம்பரம் வந்து விட்டிருந்தது..நக்கீரம் படித்துக்கொண்டிருந்தவர் புத்தகத்தை விட இங்கு நடப்பது சுவாரசியமாய் இருக்கிறதென நினைத்திருப்பார் போலும் , புத்தகத்தை எடுத்து வைத்து விட்டு இவர்களை கவனிக்க தொடங்கி விட்டார்..

தொடர்ந்து குரோம் பேட்டை வரை பயணித்து என்ன நடக்கிறதென பார் என மனதில் தொடர்ந்து கூக்குரல் கேட்டது...என்னதான் இருந்தாலும் நானும் எல்லாரை போல சாதாரண மனிதன் தான் என்பதை நினைத்து ரயிலை விட்டு இறங்கி நடக்கத் தொடங்கினேன் வீட்டை நோக்கி...

அனுபவங்கள் தொடரும்...

கல்யாணி ஒரு நடிகையாவாள்

$
0
0
கல்யாணி ஒரு நடிகையாவாள் என
யாரும் எதிர்பார்த்திருக்க வில்லை

கல்லூரி கலாட்டா என ஒரு பிரபல
நடிகருடன் ஆறு மாணவிகளில் ஒருத்தியாய்
கலந்து கொண்ட இவளின் குறுமபையும் அழகையும்
ரசித்த நடிகர் இவளை தன் ரஸிகா என பெயர் மாற்றி
தன் அடுத்த படத்தில் அறிமுகப்படுத்தினார்

தொலைக்காட்சிகள் இவள் வெள்ளந்தியாய் பேட்டி
கொடுத்ததை ரசித்த ரசிகர்கள் கனவில்
இவளை நினைத்து சொப்பன்ஸகலித்தம் செய்தனர்

வரிசையாக திரைப்படங்கள் முண்ணனி நடிகர்களுடன்
தமிழக அரசு விருது என அவள் வாழ்கை தடதடத்தது

3 வருடங்களுக்கு பின்...


அடுத்தடுத்த இரண்டு காதல் தோல்விகள்
ஒரு திருமணம்
மூன்று தற்கொலை முயற்சிகள்
என அவள் வாழ்க்கை பத்திரிக்கை செய்தியாகியது

இப்போது அவள் வாரப்பத்திரிக்கையொன்றில்
வாசர்களின் அந்தரங்க பிரச்சினைகளுக்கு
பதில் சொல்லிக்கொண்டிருக்கிறாள்

ராவணன்-மணியின் அடுத்த படத்துக்காக வெயிட்டிங்!!!

$
0
0
ஏற்கனவே பல பேரு எழுதி கிழிச்சு துவைச்சு காயப்போட்டாலும் நம்ம கருத்தை நாம சொல்லலனா கைகால் எல்லாம் நடுங்க ஆரம்பிக்குது அதனால..



சமீபத்தில் எதிர்பார்த்த 500 டேஸ் ஆப் சம்மர் ச்சி ச்சி சாரி விண்ணைத்தாண்டி வருவாயா க்கு அப்புறம் மன்மத அம்புக்கு முன்னாடி எதிர்பார்த்த படம்

தாம்பரம் வித்யா தியேட்டர் ஒரே ஒரு விக்ரம் கட் அவுட்டோட வரவேற்க்கும் போதே மைல்டா ஒரு டபுட்

வீரா பாடலை பெயர் போடும் போது போட்டு வயித்தெரிச்சலை கட்டிக்கொண்டார் மணி

ப்ரித்விக்கு இதே போல இதுக்கு முன்னாடி ஏதோ ஒரு படத்திலும் உம்ம்னா மூஞ்சி கேரக்டர் பார்த்த மாதிரி நியாபகம் ஐஷு பாப்பா அநியாய அழகு..மனிஷா கொய்ராலாவை தமிழ் டைரக்டர்கள் கலற்றி விட்டது குட் நியூஸ்..

ஆனா இந்த மாதிரி பெரிய பட்ஜட் படத்துக்கு ஐசுவையே போடுவது என்ன வளம் இல்லை இந்த தமிழ்நாட்டில் உணர்ச்சிய தூண்டுகிறது .. இப்போ புதுசா அனுஷ்கா ன்னு ஒண்ணு வந்துருக்கு அதை யாரும் சரியா பயன்படுத்தலன்னு சினிமா வட்டாரத்துல ஒரு பேச்சிருக்காம்

அதை சீக்கிரமே பயன்படுத்தனும்னு உலகத் தமிழ் பட இயக்குநர்களுக்கு இணையான தமிழ் பட இயக்குநர்களிடம் யாராவது கோரிக்கை வைத்தால் தேவலை ..நான் சங்கரின் வெப்சைட்டில் வைத்தேன் அவர் அதை டெலிட் பண்ணிபுட்டாரு பாருங்க என்னமோ சொல்ல வந்து என்னமோ சொல்றேன் நான் கதைய பத்தியோ ராமாயணத்த பத்தியோ பேசப்போறதில்ல ஆனா பிரியாமணிய பத்தி சொல்லியாகனும்

20 பேரு இரவும் பகலும் ரேப் பண்ற மாதிரி ஒரு சீன் நம்ம படத்துல இருக்குன்னு யாரவது டைரக்டர் அசிஸ்டெண்கிட்ட சொன்ன போதும் உடனே அம்மணிக்கு போன் பறக்கும் போல வலிக்குதுடா(ப்ரிய மணி ஸ்டைலில் படிக்கவும்)

அந்த தொங்குபால பைட்டு நச்சு ..ஐசு எதுவோ பேச வீரய்யா என்னமோ டயலாக் பேசுறாரு உருகுறாரு.சுகாசினி சுஜாதாவா பத்தி பேசினா மட்டும் போதாது!!!

சுஜாதாவின்/அழகம்பெருமாலின்/மணியின் டயலாக்ஸ் பக்கம் வரலை சுகாசினியின் வசனம்ஸ்..முன்னாடியெல்லாம் ஹீரோயினுக்கு மட்டும் தான் வாய்ஸ் கொடுத்துக்கொண்டிருந்தார் இந்த படத்தில் இப்படி ஒரு புரோமோஷன்

படத்தில் நான் சிரித்த ஒரே இடம் பிரபுவின் ‘ஜோக்கடிச்சா சிரிக்குறது கிடையாது துப்பாக்கிய காட்டினா பயப்படறுது கிடையாது’ இந்த படத்தை சுகாசினி அம்மையார் ஜெயா டிவியில் நியாயத்தராசில் வைக்குமா? விக்ரம் நல்ல ஜொலிப்பு உடம்பிலும் நடிப்பிலும் அதுக்காக இப்படி 2 வருஷத்துக்கு ஒரு படம் நடிச்சு கமலோ ரஜினியோ ஆக முடியாது அதுக்கு இன்னும் மேல மேல போகனும்

எங்க ஊரு பக்கத்து ஊரு பேரைச்சொல்லிப்புட்டு எங்கோயோ சூட் பண்ணியிருக்காப்புல இந்த சிங்கம் ஹரி தான் நெல்லைன்னு சொல்லிப்புட்டு சாலிகிராமத்துல செட்டு போட்டு படம் எடுப்பாப்புல ம்ம் கார்த்திக்கை பார்த்து யாருக்கும் சிரிப்பு வரலை , சுமோ வீரன் பிரபு ஓரளவு உடம்பு காட்டியிருக்காரு



வயசான ஸ்காட்ச் மாதிரி ஐஷு மின்னுவது அபிஷேக் பச்சனை பார்த்து பரிதாபப்படவைக்கிறது(?????)

இந்தியிலும் பார்த்துப்புட வேண்டும் அங்கேயாது கதை பொருந்தியிருக்கான்னு பார்க்கனும்.மறக்காம

ஒரு முறை பாருங்க ஒளிப்பதிவுக்காக ஐஷுக்காக விக்ரமுக்காக கடைசியா போன போவுதுன்னு ரஞ்சிதாவுக்காக

மணியின் அடுத்த படத்துக்காக வழக்கம் போல வெயிட்டிங்!!!

லொள்ளு ஹே லொள்ளு

$
0
0
1.பாடல் :காதல் வந்தால் சொல்லி அனுப்பு

நாம்:Bank balance இருந்தால் வருகிறேன்

2.பாடல்: கண்ணாலனே எனது கண்ணை நேற்றோடு காண வில்லை

நாம்: B3 ஸ்டேசன்ல போய் கம்பிளையண்ட் கொடு

3.பாடல்: நானாக நான் இல்லை தாயே

நாம்: கீழ்பாக்கம் பக்கம் தான் நாயே

4.பாடல்: என்னை காண வில்லையே நேற்றோடு

நாம்: 2 வது கேள்விக்கு நாங்க சொன்ன அதே பதில் தான் உனக்கும்

5.பாடல்: பீமா பீமா பீமாக்கிட்ட கதையை கேட்டேன்

நாம்: முதல்ல நல்ல டைரக்டர்ட்ட கதைய கேளுடா லூசு

6.பாடல் : நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்..
நாம் : அதுல கூட ரீ-மேக் தானா, சுயமா எதையும் செய்யமாட்ட…

7.பாடல் : நான் காற்று வாங்கப்போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்..
நாம் : சொன்னதை விட்டுட்டு கண்டதையெல்லாம் வாங்கு..

8.பாடல் : தோழியா என் காதலியா யாரடி நீ சொல்லு…
நாம் : நல்லா பாருடா, அவ உங்க ஏரியா பிட்சைக்காரிடா..

பின்குறிப்பு: உங்க கற்பனை குதிரைய அவுத்து வுடுங்க…பார்த்து கடிவாளத்த டைட்டா புடிச்சுக்கோங்க ..கீழ விழுந்துற போறீங்க..கட்சில எல்லாத்தையும் தொகுத்துப்போட்டுக்கலாம்

நமீதா குட்டி-த்ரிஷா-ஸ்ரேயா பாப்பா

$
0
0
இப்போதெல்லாம் குழந்தைகளின் பெயர்கள் அல்லது பெரிய பாப்பாக்களை சின்ன பாப்பாவாய் நினைத்துக் கொண்டு நிறைய பேரு கவுஜ எழுத ஆரம்பித்து விட்டார்கள்..இது என்ன புது டிரண்டோ..கடந்த வார விகடனில் கூட இப்படி ஒரு கவிதை பார்த்ததாய் நியாபகம்
அப்படி நானும் முயன்றதில் சில உங்கள் பார்வைக்கு

முகத்தை மட்டும் பார்த்து பேசமுடியாதா உன்னால
முறைக்கிறாள் நமீதா குட்டி
நான் உன் அகத்தையும் சேர்த்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்
என இளிக்கிறேன் நான்


போதை ன்ன என்னடா மலங்க மலங்க கேட்டாள் த்ரிஷா
இடைவெளி விடாமல் முத்தம் கொடுத்தேன்
இப்போதெல்லாம் அந்த கேள்வியை அவள் கேட்பதேயில்லை

வானவில்லில் எத்தனை நிறமிருக்கிறது தெரியுமா
சிரிப்பினிடையே கேட்கிறாள் ஸ்ரேயா பாப்பா
உன் நிறத்தில் எத்துனை வானவில்கள் இருக்கிறது
தெரியுமா எனதிருப்பிக் கேட்டேன்
கால்களில் மறுபடியும் கோலம்போட ஆரம்பித்து விட்டாள்

summaaaaaaaa:)

இந்த படமெல்லாம் தமிழில் வருவதற்கு முன்னர் தயய் செய்து பார்த்துவிடுங்கள்

$
0
0
சமீபத்தில் பார்த்த படங்கள்:



நண்பர் கம் பிளாகர் கொடுத்த ‘The Band’s visit’ பார்த்தேன்..வாவ் ..வார்த்தையில் விவரிக்க முடியாத உணர்வு அது..என்ன அருமையான நடிகர்கள்,இயல்பான நடிப்பு..எளிமையான கதை..அட்டகாசமான ஒளிப்பதிவு .மிகமுக்கியமாக பின்னனி இசை

எகிப்தை சேர்ந்த ஒரு பேன்ட்(இசைக்குழு) இஸ்ரேலுக்கு வருகிறது அவர்களுக்கு அங்கு இசை நிகழ்ச்சி நடத்த அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது..

ஆனால் போக வேண்டிய இடத்திற்கு பதிலாக இவர்கள் வேறு ஒரு இடத்தில் இறங்குகிறார்கள்
அங்கு ஒரு உணவகத்தில் உரிமையாள பெண்ணிடம் உதவி கேட்கின்றனர் அன்று இரவு அவர்களை அங்கு அவள் தங்க அனுமதிக்கிறாள்..

அந்த இரவில் என்ன நடக்கிறது இது தான் கதை..ஒரு இரவு இவ்வளவு நீண்டதா என் யோசிக்க வைத்த படம்..

யோசித்து பார்த்தால் இரவு நீளமானது தான்..2006 ல் நான் ஒரு பிளாகில் படித்த அந்த அருமையான கவிதை இப்போது நினைவிற்கு வருகிறது

“அந்த இரவில் அவசர உதவிக்கு
ஆம்புலன்ஸ்க்கு தொலைபேசுபவன் மேல்
உலகின் கை எழுதுகிறது
உலகின் மிக நீண்ட இரவிற்கு தயாராகுங்கள்”

வார்த்தைகள் சரியாக இல்லை ஆனால் அர்த்தம் இது தான்.

இந்த படத்தில் குறிப்பிடத்தக்க விஷயங்கள்

அந்த பேன்ட் தலைவரின் அருமையான நடிப்பு ..அந்த மிடுக்கு இளைஞனின் நடிப்பு..அந்த உதவி தலைவரின் நடிப்பு..

இந்த படமெல்லாம் தமிழில் வருவதற்கு முன்னர் தயய் செய்து பார்த்துவிடுங்கள்

சமீபத்தில் பார்த்த படம் தமிழில்



அதிக எதிர்பார்ப்பில்லாமல் போனதால்

என்னவோ அதிக ஏமாற்றமில்லை..கமல் வழக்கம் போல மாதவனை டம்மியாக்கியிருக்கிறார்
த்ரிஷா குட்டிக்கு நடிக்க கொஞ்சம் வாய்ப்பு..சங்கீதாக்கு இந்நேரம் 5 படங்கள் கையிலிருக்கலாம் மாதவனை படம் முழுக குடிகாரனாய் காட்டி டார்ச்சர் பண்ணி விட்டார்கள்..குரூப் காமெடி சகிக்க முடிய வில்லை ..கமல் கொஞ்சம் ரஜினி போல செய்கிறார்..உலக நாயகன் என பெயர் போடும் போது ..மொபைலை மேலே போட்டு காட்ச் பிடிப்பது… பையனின் தொண்டையிலிருந்து காயின் எடுப்பது என!
மிகப்பிடித்த விஷயம் இந்த படத்தில் அந்த ரிவர்சில் போகும் பாடல்.

சமீபத்தில் ரசித்த பாடல்கள்:

ஈசன் படத்தில் வரும் ‘மெய்யான இன்பம்’ பாடல்..அருமையான பார்டி பாடல் ..இப்பொதெல்லாம் அடிக்கடி கேட்கிறேன்..சுக்விந்தரை விட அந்த இன்னொரு பாடகரின் குரல் தான் அதிகம் கவர்கிறது..கேட்டுப்பாருங்கள்

மற்றொரு பாடல் தோல்வி அடைந்த 1/ கட்டிங் படத்தில் வரும் ‘தேடியே தேடியே’..எளிமையான வரிகள் அருமையான கட்சியமைப்பு..

சமீபத்திய பயணம்:


என் சொந்த ஊருக்கு 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கடந்த மாதம் சென்றேன் ..இங்கிருந்து மங்களூர் மங்களூர் மெயிலில் கோவை வழியாக பயணம்

சின்ன வயது நியாபகங்கள் அலைமோதியது.சொர்ணூரில் புரோட்டாவும் வாங்கியது எப்போது டா பேக்கல் கோட்டை(உயிரே படத்தில் வரும் அந்தக்கோட்டை, அப்புறம் மனிஷா பாட்டி ஓடி வரும் அந்த இடங்கள் எல்லாத்தையும் மனைவிக்கு சின்னக்குழந்தையின் குதுக்கலத்தோடு காமித்துகொண்டே வந்தேன் காசர்கூடில் வரும் அத 2 நிமிட குகை..மங்களூருக்கு முன்னாடி வரும் நேத்ராவதி ஆறு என எல்லாவற்றையும் மீண்டும் பார்த்ததில் மனது நிறைந்தது

புத்தக சந்தை இந்த வருடமும்…

$
0
0
இந்த வருடமும் ஏகப்பட்ட ரிமைண்டர் வைத்து ஒரு வழியாக இரண்டு பள்ளி நண்பர்களுடன் போயே விட்டேன்..ஒரு மாற்றத்திற்காக பீச்சுக்கு போவதை விடுத்து நிறைய காதலர்கள் , பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளை அழைத்து வந்திருந்தார்கள்..வழக்கம் போல் மூத்திர பிறை கொடுமையாய் இருந்தது


கிழக்கு பதிப்பகம் மற்றும் உயிர்மையில் கூட்டம் அதிகம்..சுயமுன்னேற்ற சிக்ஸ்த் சென்ஸ் மற்றும் மணிமேகலை மாதிரியான பதிப்பகங்களில் வேறுவிதமான கூட்டமதிகம்.


சாகித அகாடமி புத்த்கம் அதிக சேல்ஸ்..கோபிநாத் அடுத்த புத்தகம் எழுத ஆரம்பித்து விட்டாரம்..சிவகுமார்..சூர்யா..அடுத்து கார்த்தி கூட எழுதலாம்


விகடனில் ஆன்மீக கூட்டம் அதிகம்..எஸ்.ராவின் 3 புத்தகம்ஸ் ஒரு சாரு அப்புறம் வாத்தியார் என் சிக்கனமாய் முடித்துக்கொண்டு கிளம்பினேன்


சில பிளாகர்களையும் பார்க்க முடிந்தது..மனுஷ்ய புத்திரன் அந்த கூட்டத்திலும் தனிமையாயிருந்தார்..கிழக்கில் சுஜாதா புத்த்கங்களை மக்கள் அள்ளிக்கொண்டிருந்தனர்..


‘சுஜாதாவும் ஸீரோ டிகிரி எழுதினார் தானே?’


‘சாரு பகிரங்கரமாய் எழுதுவார்‘


‘காபி இல்லையா டீ நல்லாவே இல்லை‘


‘இதுக்கு பீச்சுக்கு போயிருக்கலாம்‘


‘சார் வீட்டுக்கு திரும்பி போக மட்டும் தான் காசு வச்சிருக்கேன் எல்லாத்துக்கும் புத்தகம் வாங்கிட்டேன்‘


‘குழந்தை சுகன்யாவின் அம்மா எங்கே சமையல் குறிப்பு வாங்கிக் கொண்டிருந்தாலும் அலவலகத்திற்கு வரவும்‘


இந்த மாதிரி சம்பாஷனைகளை தாண்டி ஒரு குல்பி ஐஸோடு சுபம் போட்டு வீட்டுக்கு கிளம்பிட்டேன்
Viewing all 52 articles
Browse latest View live